Skip to main content

நெய்வேலி தலைமைக் காவலரைப் பட்டாக் கத்தியால் தாக்க முயன்ற ரவுடி கைது!

Published on 07/05/2022 | Edited on 07/05/2022

 

Rowdy arrested for trying to attack Neyveli Chief Constable

 

கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் தண்டபாணி. இவர், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் இருந்த போது கீழக்கொல்லை அருகே மோட்டார் சைக்கிளில் 2 பேர் நின்ற கொண்டிருந்ததை பார்த்து, “ஏன் இரவு நேரத்தில் இங்கே நிற்கிறீர்கள்?” என்று கேட்டபோது, “நீங்க என்ன கேட்பது..” என கேட்டுள்ளார். இதனை ஒருமையிலும், மேலும், அவதூறான சொல்கொண்டும் சொல்லி அநாகரிகமாக திட்டியுள்ளார். 

 

மேலும், அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தண்டபாணியை தாக்கியுள்ளனர். அப்போது தண்டபாணி விலகியதால், அவர் மீது கத்தி படவில்லை, காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் அவருடைய மோட்டார் சைக்கிளை வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேரும் சேர்ந்து அடித்து சேதப்படுத்தி உள்ளனர்.  

 

Rowdy arrested for trying to attack Neyveli Chief Constable

 

பின்னர் தண்டபாணி, மற்றும் அவருடன் இருந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வெங்கடசுப்ரமணியன் ஆகிய இருவரும் வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க முற்பட்டனர். ஆனால், இரண்டு பேரும் தப்பி ஓடியுள்ளனர். பின்னர் இதுகுறித்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் எழுந்து போலீசாரை விரட்டி வந்த வீரமணியை மடக்கிப் பிடித்தனர். 

 

 

இதுகுறித்து தண்டபாணி முத்தாண்டிக்குப்பம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீரமணி மீது நெய்வேலி பகுதி காவல் நிலையத்தில் 10 வழக்குகள் உள்ளன. மேலும் வீரமணி குண்டாஸ் வழக்கில் இருந்து வெளியே வந்து 15 நாட்கள் தான் ஆகிறது. இந்த நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி காவலரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.