போலீஸை தாக்கிவிட்டு தப்பியோடிய ரவுடிகள் - திருச்சியில் பயங்கரம்

rowdies who attacked the police in Trichy and fled

திருச்சி அரியமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சந்திரமோகன். இவர் ரோந்து வாகனத்தில் அரியமங்கலம் ஸ்டாலின் நகர் டாஸ்மாக் மதுபானக்கடை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது பொலிரோ பிக்-அப் வாகனத்தில் இரண்டு ரவுடிகள் வந்தனர். அப்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரமோகன் மற்றும் வெற்றிமணி ஆகியோர் அந்த வாகனத்தை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் வாகனத்தில் சோதனையிட்டபோது இரண்டு அரிவாள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த நபர்களைப் பிடிக்க முயன்றனர். அப்போது ரவுடிகளுக்கு ஆதரவாக பெண்கள் உள்பட மேலும் 3பேர் அங்கு வந்தனர். அந்த கும்பல்சந்திரமோகன் மற்றும் வெற்றிமணியை கையால் தாக்கிவிட்டு ரோந்து வாகனத்தை சேதப்படுத்தினர். மேலும், அரிவாளைக் காட்டி மிரட்டிவிட்டுதப்பிச் சென்றனர்.

இதுகுறித்து சந்திரமோகன் அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் தப்பி ஓடிய பிரபல ரவுடிகள் அரியமங்கலம் அண்ணாநகர் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 29), அரியமங்கலம் காவேரிநகர் திடீர்நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (23) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய இளவரசன், ரேணுகாதேவி மற்றும் கிருஷ்ணவேணி ஆகிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.

police rowdies trichy
இதையும் படியுங்கள்
Subscribe