Skip to main content

ஓயாத ரூட் தல பிரச்சனை! 9 மாணவர்கள் கைது!

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் ரூட் தல பிரச்சனை மட்டும் ஓயாது என்பதற்கு சான்றாக மேலும் மேலும் ரூட் தல பிரச்சனை முற்றுப்புள்ளி வைக்கப்படாத ஒன்றாகவே நீடித்து வருகிறது.

நேற்று சென்னை மாநில கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள்  25 பேர் மாலை கல்லூரி முடிந்ததும், சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் வரை ரயிலில் பயணம் செய்தனர். அப்போது மாணவர்கள் ரூட்கென தனி வாட்சப் குரூப் மூலமாக ஒரு பிரிவினர் இன்னோறு பிரவினை இழிவுபடுத்தும் வகையில் இருவரும் மாறி மாறி திட்டியுள்ளனர்.

 

''root thala'' issue-9 students arrest


பிறகு பிரச்சனை உச்சத்திற்கு சென்ற நிலையில் இருவரும் தாக்கிக்கொண்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட ராயபுர மாணவர்கள் சக நண்பர்களுக்கு செல்போனில் தெரிவித்துள்ளனர். பின்னர் தாக்குதல் நடத்திய மாணவர்கள் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் மார்க்கம் செல்லும் ரயிலில் சென்றனர். மின்சார ரயில் ராயபுரம் அருகே சென்றபோது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக ராயபுரத்தை சேர்ந்த அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் ரயில் பெட்டி மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

ஒரு கட்டத்தில் ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் ரயில் பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை பாதி வழியிலேயே நிறுத்தியுள்ளனர். நடு வழியில் ரயில் நின்றதால் பயணிகள் சிலர் இறங்கி ஓட்டம் பிடித்தனர். சிலர், காவல்துறை அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதைப்பார்த்த கல்லூரி மாணவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். அதில் ஆதித்யா, கணேஷ் அபிஷேக், தீனதயாளன், ஹேம்நாத், தமிழ்செல்வன், வாணிவர்மா, கார்த்திக் உள்ளிட்ட 9 மாணவர்களை காவல்துறை மடக்கி பிடித்தனர். பிறகு அனைவரையும் எழும்பூர் ரயில்வே போலிசாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் ஐபிசி 160 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு மாணவர்களை அதிரடியாக கைது செய்தனர்.  

 

''root thala'' issue-9 students arrest

 

இது தொடர்பாக மாநிலகல்லூரி முதல்வர் பத்மினி அவர்கள் கூறுகையில், இது ரூட் பிரச்சனை போல தெரியவில்லை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் இரண்டாம் ஆண்டு மாண்வர்களும் இடையே மோதல் ஏற்பட்ட பிரச்சனைதான். தற்போது இதில் தொடர்புள்ள மாணவர்களை விசாரித்து வருகிறோம். அவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல  இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க மாணவர்களிடைய மாதம்  ஒருமுறை கூட்டம் நடத்தப்படும் என்றார்.

இந்த டூத் தல பிரச்சனைகளை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக பார்க்காமல் கல்வியில் ஏற்படும் பிரச்சனையாகவே பார்க்கவேண்டியுள்ளது. இது போன்ற  பிரச்சனையை அரசியல் கட்சிகளே ஊக்கப்படுத்துகிறது அதற்கு சான்றாகவே சென்ற தேர்தலில் ரூட் தல மாணவர்களை அழைத்து தனி கூட்டம் போடப்பட்டு தேர்தலில் பணிக்கு பணம் கொடுக்கப்பட்டது என்கிறார் இந்திய மாணவர் சங்கம் மாநில செயலாளர் மாரியப்பன்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.