Skip to main content

எருதுவிடும் விழாவில் மேற்கூரை இடிந்து விபத்து... 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Published on 10/01/2021 | Edited on 10/01/2021

 

 Roof collapses during bullfight ... More than 20 injured!

 

பொங்கல் பண்டிகையையொட்டி 'ஜல்லிக்கட்டு' மற்றும் 'எருதுவிடும் விழா' ஆகியவற்றுக்கு தமிழகம் தயாராகி வருகிறது. கிருஷ்ணகிரியில் பல்வேறு கிராமங்களில் எருதுவிடும் விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள நேரலகிரி என்ற கிராமத்தில் காலை 6 மணியில் இருந்து  எருதுவிடும் விழா நடைபெற்று வந்தது. அப்போது எருதுவிடும் விழாவை கண்டு ரசிப்பதற்காக வந்த பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் வீட்டு மாடியில் இருந்து இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். 

 

அப்படி புதிதாக கட்டப்பட்ட ஒரு வீட்டின் மேற்கூரையில் இருந்து பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் எருது விடும் விழாவை பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அனைவரும் இடிபாடுகளில் சிக்கினர். இந்த சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீரர்களும் அந்த இடிபாடுகளில் சிக்கினர். எதிர்பாராது நிகழ்ந்த இந்த விபத்தில் மேகாஸ்ரீ என்ற 8 வயது சிறுமியும், பாலமுரளி என்ற 68 வயது முதியவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எருது விடும் விழாவில் மேற்கூரை இடிந்து விழுந்து 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.