தமிழகம் முழுவதும் கரோனா பதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டு அங்கு வசிக்கும் மக்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறுபாதுகாக்கப்படும் பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், அவர்களின் தேவைகளை வெளியில் இருந்தவாறே தெரிந்துகொள்ளவும் தமிழக காவல்துறை ரோபோக்களைப் பயன்படுத்த துவங்கியுள்ளது.
சென்னை, மயிலாப்பூரில் உள்ள மீனாம்மாள்புரம் பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியைக் கண்காணிப்பதற்காக முதன் முதலில் ரோபோ பயன்படுத்தப்பட்டுள்ளது.