sgsf

காட்டுமன்னார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாலவிநாயகம் (21). கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இவர் தனது காதலியைப் பார்ப்பதற்காக திருச்சிக்கு வந்தார். நேற்று முன்தினம் (06.11.2021) இரவு 8.30 மணி அளவில் தனது காதலியுடன் திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால் பகுதியில் உள்ள பூங்காவில் பேசிக்கொண்டிருந்தார்.

Advertisment

அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், பால விநாயகத்தை கத்தியால் முகத்தில் தாக்கி, அவரிடம் இருந்த ரூ. 850 பணம் மற்றும் 2 விலை உயர்ந்த செல்ஃபோன்களையும் பறித்துச் சென்றுவிட்டனர்.

Advertisment

இதுகுறித்த புகாரின்பேரில் திருச்சி ஜி.எச். குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவுசெய்துதிருச்சி புத்தூர் திரு.வி.க.நகரைச் சோ்ந்த ஜாகீர் உசேன் (26), சிவக்குமார் என்ற சிவசங்கர் (19) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 15, 16, 17 வயதான 3 சிறுவர்கள் ஆகியோர்தான் குற்றவாளிகள் என கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து 5 பேரையும் கைதுசெய்த போலீசார், ஜாகீர் உசேன், சிவக்குமார் என்ற சிவசங்கர் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 3 சிறுவர்களும் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.