திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்தில் உள்ள பாமுத்தம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அரையாண்டு விடுமுறைக்கு பின் ஜனவரி 6ந்தேதி காலை தான் திறக்கப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் அறையை திறந்து உள்ளே சென்றபோது உள்ளேயிருந்த பொருட்கள் கலைந்தும், சில பொருட்கள் உடைக்கப்பட்டும் இருந்தது. இதனை கண்டு தலைமையாசிரியர் அதிர்ச்சியாகியுள்ளார். அந்த அறையின் பின் பக்க ஜன்னல் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்துள்ளனர். பள்ளியின் தலைமையாசிரியர் அறையில் இருந்த பள்ளிக்கு சொந்தமான ரேடியோ ஆம்பளிபயர் பாக்ஸ் உட்பட சில எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக் சாதனங்கள் வைத்திருந்துள்ளனர். அவைகள் திருடுப்போய்வுள்ளது. அதோடு சில பேப்பர்கள் கிழித்து போடப்பட்டும் இருந்துள்ளன. இதுயெல்லாம் பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களின் ஆவணங்கள் என தெரியவந்துள்ளது.
இதைக்கண்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களும் திருப்பத்தூர் கிராமிய போலீஸார் புகார் தெரிவித்தனர். அவர்கள் வந்ததும் தலைமையாசிரியர் சார்பில் புகார் எழுதி தரப்பட்டது. அவர்கள் அதனை பார்த்துவிட்டு விசாரணையை துங்கியுள்ளனர். பள்ளிக்குள் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் கிடைத்திருக்க போவதில்லை. சில எலக்ட்ரிக் பொருட்கள் மட்டும் திருடு போய்வுள்ளது. அதற்காக தான் இந்த திருடு நடந்ததா ? அல்லது வேறு ஏதாவது காரணம்மா என தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர். அதே நேரத்தில் கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளியின் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை!
சார்ந்த செய்திகள்
Next Story
நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள்; கள்ளக்குறிச்சியில் துணிகரம்
கள்ளக்குறிச்சியில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நூதன முறையில் எந்த பகுதியில் நகைகள் உள்ளது என கண்டறிந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள எஸ்.வி.பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருள்ஜோதி. அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களால் 67 சவரன் நகை மற்றும் 23 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வந்த நிலையில், வளவனூர் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவர் அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உதயா மற்றும் மாரி ஆகிய இருவரை கைது செய்த போலீசார், உருக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த கொள்ளை அடிக்கப்பட்ட 25 சவரன் தங்கத்தை கைப்பற்றினர். மேலும் 2 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.
இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தங்க நகை எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மெட்டல் டிடெக்டரை பயன்படுத்தி இவர்கள் கொள்ளையடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story
அடுத்தடுத்து மூன்று கடைகளில் கொள்ளை;போலீசார் விசாரணை
ஈரோட்டில் மூன்று கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர். இவர் அந்த பகுதியில் துரித உணவு கடை வைத்திருந்தார். நேற்று இரவு 12 மணியளவில் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் சாவியை திறந்து அதில் இருந்த ரூ.3000 பணம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.
அதனருகே உள்ள மற்றொரு குளிர்பான கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பணம் இல்லாததால் திரும்பிச் சென்று விட்டனர். குளிர்பானம் கடை அருகே ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றவர் இன்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 26 ஆயிரம் ரொக்க பணம் திருட்டுப் போய் இருந்தது.
இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருப்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.