Skip to main content

மதுரையில் கொரியர் பாய் வேடத்தில் மிளகாய் பொடி தூவி கொள்ளை... சிக்கிய தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்!!

Published on 30/06/2019 | Edited on 30/06/2019

மதுரையில் கொரியர் டெலிவரி செய்வது போல் தொழிலதிபர் வீட்டில் புகுந்து 32 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரையில் கடந்த 27ஆம் தேதி தொழிலதிபர் வீட்டுக்கு கொரியர் பாய் போல் சென்று மிளகாய் பொடி தூவி பணம் நகைகளை கொள்ளையடித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  மதுரை மேல அனுப்பானடி கண்மாய் பகுதியில் கடந்த 27ஆம் தேதி மதியம் அப்பகுதியில் உள்ள வெற்றிவேல் என்ற தொழிலதிபரின் வீட்டுக்கு கொரியர் கொடுப்பது போல் இரண்டு நபர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

robbery in madurai...Private School Physical Teacher arrest!


ஹெல்மெட் அணிந்து கொண்டு கோரியர் கொடுப்பது போல் வந்த நபர்கள் கதவை தட்ட அப்போது கதவை திறக்க வீட்டில் இருந்த வெற்றிவேல் மற்றும் அவரது மனைவி, மருமகள் ஆகிய 3 பேர் மீதும் மிளகாய் பொடியை தூவி அவர்களை கட்டிப்போட்டு 47 சவரன் நகை மற்றும் 32 லட்சம் ரூபாய் ரொக்கம் போன்றவைகள் கொள்ளையக்கப்பட்டது. இதுதொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் மூன்று தனிப்படை அமைத்திருந்தார்.

robbery in madurai...Private School Physical Teacher arrest!


அதனடிப்படையில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தனியார் விடுதியில் தங்கியிருந்த தினேஷ் மற்றும் ஜஸ்டின் என இரண்டு பேரை காவல்துறை கைது செய்தது. ஆனால் அதற்கு முன்பே வீரகுமார் என்ற நபர் கைது செய்யப்பட்டிருந்தார் இந்த வழக்கில்.

 

robbery in madurai...Private School Physical Teacher arrest!


தொழிலதிபர் வெற்றிவேலின் இரண்டு மகள்கள் படிக்கக்கூடிய பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுபவர் வீரகுமார்.  மதுரையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கும் அந்த குடும்பத்திற்கும் ஏற்பட்ட நல்ல உறவை பயன்படுத்தி யார் யார் வீட்டில் செல்வச் செழிப்பாக இருக்கிறார்கள் என அறிந்து கொண்டு அவர்கள் வீட்டில் உள்ள பணங்களை கொள்ளையடிக்க திட்டமிட்டுவது வீரக்குமாரின் வழக்கமாம்.

கைது செய்யப்பட்ட வீரகுமார் கூறிய தகவலின் அடிப்படையில் மதுரை தினேஷ் மற்றும் ஜஸ்டின் ஆகியோரை  கைது செய்தனர். வீரக்குமார், தினேஷ் மற்றும் ஜஸ்டின்  ஆகிய 3 பேரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 46 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு 32 லட்சத்தில் 30 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.