Skip to main content

டாஸ்மார்க் ஊழியர்களை தாக்கி கொள்ளை

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

 

22.02.2019ம் தேதி கூட்டேரிப்பட்டு டாஸ்மார்க் கடையின் விற்பனை முடித்து பணம் ரூ.1,15,363யை சரி பார்த்துக்கொண்டிருக்கும் போது 6 நபர்கள்  தங்கள் கைகளில் வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியை காட்டி பணத்தை கொடுக்கும்படி மிரட்டியுள்ளனர். டாஸ்மார்க் கடை ஊழியர்களான சங்கர், திருவேங்கடம், சோழன் ஆகிய மூவரும் கத்திக்கொண்டு ஓடியபோது கொள்ளையர்கள் மூன்று பேர் டாஸ்மார்க் ஊழியர் சங்கரை  வெட்டியதாகவும் அவர் தன்னிடமிருந்த பணத்துடன் தப்பி ஓடிவிட்டதாகவும், மற்ற மூன்று கொள்ளையர்களும் டாஸ்மார்க் ஊழியர் சங்கரின் நண்பரான சக்திவேலை விரட்டிச்சென்று  அவரிடமிருந்த ரூ 46,000 ஆயிரத்தை பறித்து கொள்ளையடித்து அங்கிருந்து கொள்ளையர்கள் அனைவரும் தப்பிச்சென்றுள்ளனர்.
 

இது சம்மந்தமாக டாஸ்மார்க் மேர்பார்வையாளர் சங்கர்  கொடுத்த புகாரின் பேரில் மயிலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட கொள்ளையர்களை கண்டுபிடிக்க விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் உத்திரவின் பேரில், திண்டிவனம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமால் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது

.

அவர்களின் தீவிர விசாரணையிலும் தேடுதல் வேட்டையிலும், மேற்படி கொள்ளை கும்பலை சேர்ந்த இருவர் விபத்தில் சிக்கி முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக தகவல் கிடைத்து டாஸ்மார்க் ஊழியர்களை அழைத்துச்சென்று அடையாளம் காட்டி கேட்ட போது
கொள்ளை சம்பவத்தில் இவர்களும் இருந்தார்கள் என அடையாளம் காட்டியதால் அந்த  இருவரையும் விசாரிக்க சென்னையைச் சேர்ந்த சீனுவாசன், சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த பாலாஜி என தெரிய வந்தது. அதில் பாலாஜி மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். சீனுவாசன் 24.02.2019 ம் தேதி மருத்துவ சிகிச்சை முடித்து வெளியே வரும் போது போலீசார் கைது செய்தனர்.
 

அவரிடம் விசாரணை நடத்தியதில் மற்றொரு கொள்ளையன் அஜய்தேவன் என்பவரையும் கைது செய்து  இருவரிடமிருந்தும் பணம் ரூ 15,000 கைப்பற்றியும் கொள்ளை சம்பவத்திற்கு பயன் படுத்திய அரிவாள், கத்தி மற்றும் இருசக்கர வாகனங்கள் இரண்டு ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவான மூன்று எதிரிகளை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story

மக்களவைத் தேர்தல்; மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Lok Sabha elections; Orders to close liquor shops!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

இந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை, அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.