Skip to main content

மணல் கொள்ளைக்கு தடையாக இருந்த அதிகாரியை அத்திவரதர் பாதுகாப்பு பணிக்கு அனுப்பிய கொள்ளையர்கள் !

Published on 11/08/2019 | Edited on 11/08/2019

திருச்சி காவிரிப்படுகைகளில் மணல் கொள்ளை என்பதும், கள்ளத்தனமாக திருடுவது என்பதும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகளும், அரசியல்வாதிகள் கூட்டணி போட்டு கொள்ளையடித்தக்கொண்டிருக்கிறார்கள். 

இந்த நிலையில் ஸ்ரீரங்கம் காவல்நிலையத்திற்கு ஏசியாக பதவி ஏற்றார் இராமசந்திரன். இவர் பொறுப்பேற்ற பிறகு மணல் மாபியா கொள்ளையர்கள் யார் என்று தெரிந்துகொண்டு அவர்களை குறித்து கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார். இதனால் இந்த பகுதியில் மணல் கொள்ளையர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

 

sand

 

இந்த நிலையில் தீடிர் என காஞ்சிபுரம் அத்திவரதர் பாதுகாப்பு பணிக்கு ஸ்ரீரங்கம் ஏசி இராமசந்திரன் தலைமையில் அனுப்பி வைத்தனர். அவர் சென்ற அடுத்த நாளே ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் இருந்தே மணல் கொள்ளையர்களுக்கு தகவல் சென்று, நாளை முதல் ஏசி ஊரில் இல்லை. அவர் வருவதற்குள் எவ்வளவு எடுக்க முடியுமோ எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எடுப்பதற்கு கப்பம்கட்ட வேண்டியதை முதலிலே கட்டி விடுங்கள். அப்பதான் நாங்கள் மேல் அதிகாரிக்கு கப்பத்தை கட்ட முடியும் என்று பணத்தை வாங்கி கொண்டு மணல் கொள்ளைக்கு வழிவிடப்பட்டுள்ளது. தற்போது ஸ்ரீரங்கம் பகுதியில் மணல் கொள்ளையர்கள் காட்டில் பண மழையே கொட்டுகிறதாம்.

 

sand

 

இதை அத்திவரதர் நிகழ்ச்சியில் இருக்கும் ஏசிக்கு தகவல் தெரிந்ததும் கொதித்துப்போன ஏசி இராமசந்திரன், மணல் கொள்ளையர்களுக்கு உடந்தையாக இருக்கும் அந்த கருப்பு ஆடு யார் என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பேன் என்று அத்திவரதர் முன்பு சபதம் எடுத்திருக்கிறார் என்கிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கர்நாடக மாநில அரசின் உரிமையை காக்க சட்டப் போராட்டம் தொடரும்” - கர்நாடக  துணை முதல்வர்

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

Legal struggle will continue to protect the right of the Karnataka state government Deputy Chief Minister of Karnataka

 

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது ஆலோசனைக் கூட்டம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். இதையடுத்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் கடந்த 14 ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 53 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு இதுவரை 15 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளதாகவும், காவிரியில் இருந்து விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், காவிரி நதி நீர் விவகாரம் குறித்து விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்படும் எனத் தெரிவித்து இருந்தார். இந்த வழக்கை விசாரிக்கும் மூன்று புதிய நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்சநீதிமன்றம் நேற்று அறிவித்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வழக்கு வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

 

அதே சமயம் கடந்த சில தினங்களாகத் தமிழகத்திற்கு சுமார் 15 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் இருந்து கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. இதற்கு பாஜக, மஜத உள்ளிட்ட கர்நாடகாவின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. மேலும் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மாநில விவசாயிகள் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார், முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்த கவுடா, பசவராஜ் பொம்மை, குமாரசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Legal struggle will continue to protect the right of the Karnataka state government Deputy Chief Minister of Karnataka

 

இந்த கூட்டத்தில் கர்நாடக மாநில துணை முதல்வரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே. சிவகுமார் பேசுகையில், “கர்நாடக மாநில விவசாயிகளின் வாழ்வாதரத்தை பாதுகாப்பதில் கர்நாடக அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது. காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில அரசின் உரிமையை காக்க சட்டப் போராட்டம் தொடரும். இதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

காவிரி நதி நீர் விவகாரம்; கர்நாடகாவில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

Cauvery water issue All party meeting in Karnataka today

 

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது ஆலோசனைக் கூட்டம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். இதையடுத்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் கடந்த 14 ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 53 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு இதுவரை 15 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளதாகவும், காவிரியில் இருந்து விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், காவிரி நதி நீர் விவகாரம் குறித்து விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்படும் எனத் தெரிவித்து இருந்தார். இந்த வழக்கை விசாரிக்கும் மூன்று புதிய நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்சநீதிமன்றம் நேற்று அறிவித்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வழக்கு வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

 

அதே சமயம் கடந்த சில தினங்களாகத் தமிழகத்திற்கு சுமார் 15 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் இருந்து கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. இதற்கு பாஜக, மஜத உள்ளிட்ட கர்நாடகாவின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. மேலும் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மாநில விவசாயிகள் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.