Skip to main content

கத்திமுனையில் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

The robbers who involved in theft

 

பெரம்பலூர் நகரில் உள்ள மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் 65 வயது கருப்பண்ணன். இவர் பெரம்பலூர் நகரிலிருந்து எளம்பலூர் செல்லும் சாலையில் ஜவுளிக்கடை, நகைக்கடை வைத்து நடத்திவருகிறார். அதே பகுதியில் அவரும் குடியிருந்துவருகிறார். 27ஆம் தேதி இரவு பத்தரை மணி அளவில் முன்னிரவு நேரம் என்பதால் வீட்டின் கதவை உள்பக்கம் பூட்டாமல் கருப்பண்ணன் டிவியில் நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அவரது மனைவி, மகள் இருவரும் அருகிலிருந்த மற்றொரு வீட்டில் இருந்துள்ளனர்.

 

இரவு சுமார் பத்தரை மணி அளவில் முகமூடி அணிந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென கருப்பண்ணன் வீட்டிற்குள் புகுந்தது. கருப்பண்ணன் சுதாரிப்பதற்குள் அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடமிருந்து பீரோ சாவியைப் பிடுங்கிய அந்தக் கும்பல், பீரோவைத் திறந்து அதில் இருந்த 103 பவுன் நகை, 9 கிலோ வெள்ளி பொருட்கள், பத்தாயிரம் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்து வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த சொகுசு கார் ஒன்றை எடுத்துக்கொண்டு அந்த கொள்ளைக் கும்பல் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளது. அதிர்ச்சியடைந்த கருப்பண்ணன் உடனடியாக பெரம்பலூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

 

போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தடய அறிவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொள்ளையர்கள் பைக்கில் வந்து சென்றது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். இந்தக் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக 4 தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். பெரம்பலூர் நகரில் முன்னிரவு நேரத்தில் வீடு புகுந்து கத்தி முனையில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நகர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

“ எங்களுக்கு உத்தரவிடுங்கள்...” - அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

தமிழக அரசு மூலம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட  நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய அரசிடமிருந்து  திட்டங்களைப் பெற்றுநிறைவேற்றிட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அருன் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து லால்குடியில் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி ரவுண்டானாவில் தொடங்கியது. முன்னதாக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரப் பேரணியைத் தொடங்கி வைத்து பேசுகையில், “லால்குடி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நமது பகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நடைபெற்றிருப்பதை நன்கு அறிவீர்கள். மாநில அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்களைக் காட்டிலும் ஒன்றிய அரசிடமிருந்து திட்டங்களைப் பெற்று நமது பகுதியில் நிறைவேற்றிட வேண்டும். இது நமது சொந்தத் தொகுதி என்பதால் அதிகமாகத் திட்டங்களைக் கொண்டு வந்து பணிகளைச் செய்திட உங்கள் ஆதரவு கேட்டு வந்துள்ளோம்.

Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

எங்களுக்கு உத்தரவிடுங்கள், நாங்கள் பணியாற்றத் தயாராக உள்ளோம். லால்குடி நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், பொதுமக்கள் வசதிக்கேற்ப புதிய மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் எல்லாம் அடுத்த மாதம்  தொடங்கப்பட உள்ளது. எனவே இப்படிப்பட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிட உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அருண் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேரு வாக்காளரிடம் வாக்கு சேகரித்தார்.