Skip to main content

தெலுங்கானாவில் பிடிபட்ட கொள்ளையர்கள் ஓசூர் அழைத்து வரப்பட்டனர்!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

 The robbers caught in Telangana were brought to Hosur!

 

ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் 12 கோடி ரூபாய் நகைகளைக் கொள்ளையடித்த சம்பவத்தில் தெலுங்கானாவில் பிடிபட்ட கொள்ளையர்கள் 7 பேரை காவல்துறையினர் விசாரணைக்காக ஓசூர் அழைத்து வரப்பட்டனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் பைனான்ஸ் என்ற தனியார் நகை அடகு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் சில நாட்களுக்கு முன்பு 7 பேர் கொண்ட வடமாநில கொள்ளை கும்பல், 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்க நகைகளை, பட்டப்பகலில் ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளை அடித்துச் சென்றனர்.

 

இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த ஓசூர் ஹட்கோ போலீசார், சம்பவம் நடந்த 18 மணி நேரத்தில் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மாநில போலீசார் உதவியுடன் ஹைதராபாத் அருகே கொள்ளை கும்பலைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட 25 கிலோ நகைகள், 7 துப்பாக்கிகள், 96 தோட்டாக்கள், ஒரு லாரி, டாடா சுமோ கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

 

உடனடியாக தெலங்கானா சிறையில் அடைக்கப்பட்ட கொள்ளையர்களை, ஓசூருக்கு அழைத்து வர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து ஹைதராபாத் சென்ற ஓசூர் போலீசார், கொள்ளையர்களை ஓசூர் அழைத்துச் செல்ல அனுமதி கேட்டு அங்குள்ள சைபராபாத் நீதிமன்றத்தில் ஜன. 25ம் தேதி மாலை மனுத்தாக்கல் செய்தனர். நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை (ஜன. 26) கொள்ளையர்கள் 7 பேரை ஓசூர் அழைத்து வந்தனர். உடனடியாக ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், அங்குள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்கவும் ஓசூர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் சிலர் கொள்ளையடிக்க முயன்றனர். அதில் 3 பேர் பிடிபட்டனர். அந்த சம்பவத்தில் தப்பிய சிலர்தான், முத்தூட் பைனான்ஸ் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் பிடிபட்ட கும்பலிடம் விசாரணை நடத்த விரைவில் பஞ்சாப் மாநில போலீசாரும் ஓசூர் வர உள்ளனர்.

 

இதேபோல், நாடு முழுவதும் நிதி நிறுவனங்கள், வங்கிகளில் நடந்த கொள்ளைச் சம்பவத்திற்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.