Skip to main content

பள்ளி ஆசிரியர் வீட்டில் கைவரிசையைக் காட்டிய கொள்ளையர்கள் கைது...

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

Robbers arrested who involved teacher's house theft...


கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ராமாபுரம் கிராமத்துக்கு உட்பட்ட லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பராஜ். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். சின்னப்பராஜ், அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராகவும், இவரது மனைவி சகாயராணி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையப் பொறுப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். 


இவர்களது மகன்கள் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி சின்னப்பராஜ், தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள தன் மகன்களைப் பார்க்கச் சென்றுள்ளார். இந்தநிலையில், 23ஆம் தேதி அவரது வீட்டின் முன்புறக் கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள், 50 பவுன் நகை, பணம் மற்றும் பித்தளைப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

 

சென்னையிலிருந்து திரும்பிவந்த சின்னப்பராஜ், தன் வீட்டில் கொள்ளை நடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடிவந்தனர். நேற்று முன்தினம் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் அந்த வழியாக வந்த, இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்தனர். 

 

Robbers arrested who involved teacher's house theft...
                                                            செந்தில்குமார்            


அதில், அவர்கள் வடலூர் அருகே உள்ள கருங்குழி பகுதியைச் சேர்ந்த வைத்திலிங்கம் மகன் செந்தில்குமார் மற்றும் திட்டக்குடி அருகிலுள்ள ரெட்டாகுறிச்சி பகுதியைச் சேர்ந்த ராபிக் மகன் சஜீவ் என்பதும் தெரியவந்தது. இதில் செந்தில்குமார், திருப்பூரில் வேலை செய்யும்போது பாளையங் கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். பெண்ணுடன் பாளையங்கோட்டையில் தங்கி வாடகைக்கு வாகனங்களை ஓட்டி வந்துள்ளார். 

 

இவர்களிடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக, அவர் மனைவி தற்கொலை செய்துகொண்டார். மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக செந்தில்குமார் மீது சோழதரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் செந்தில்குமார். 

 

Robbers arrested who involved teacher's house theft...
                                                                 சஜீவ்

 

இந்த நிலையில் ஆசிரியர் சின்னப்பராஜ், அவரது மனைவியும் சென்னை செல்லும் முன் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுள்ளனர். அப்போது அருகில் இருந்த அவர்களது உறவினர்களிடம், தான் வெளியூர் செல்ல இருப்பதாகக் கூறி தன்வீட்டின் சாவியைக்  கொடுத்துள்ளனர். அதைத் தற்செயலாகக் கவனித்த செந்தில்குமாரும் அவரது நண்பன் சஜிவ் ஆகிய இருவரும் சேர்ந்து திட்டமிட்டு சின்னப்பராஜ் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்துள்ளனர். 


இதையடுத்து, பிடிபட்ட 2 பேரையும் ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர் வினிதா, சப் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் மற்றும் தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து நெக்லஸ், ஆரம், வளையல், செயின் உள்ளிட்ட 22 பவுன் நகைகளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

 

cnc


திட்டமிட்டுக் கொள்ளையடித்த 2 கொள்ளையர்கள் பிடிபட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களைப் பிடித்த போலீசாருக்குப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.