Skip to main content

ஐந்துக்கும் மேற்பட்ட மாவட்ட டாஸ்மாக் ஊழியர்களை கதிகலங்க வைத்த கொள்ளையர்கள் கைது... 

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

Robberies of More than five district Tasmac was arrest

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நைனார்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் கடந்த மாதம் 31ஆம் தேதி அங்கு விற்பனையாளராக பணி செய்துவரும் சுப்பிரமணியன், செல்வம், கன்னிசாமி ஆகியோர் பணி முடிந்து அன்றைய விற்பனை செய்த பணம் ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர். அப்போது அங்கு பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் அரிவாளால் சுப்பிரமணியனை தலையில் வெட்டிவிட்டு அவர் வைத்திருந்த பணத்தை பறித்து சென்றனர். இதேபோன்று திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் டாஸ்மாக் கடை விற்பனையாளர்களிடம் ரூ.3 லட்சம் கொள்ளை அடித்துள்ளனர். கடந்த 20ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் வெப்படை டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் இரண்டு லட்சம் ரூபாயை கொள்ளை அடித்துள்ளனர். தொடர்ந்து  ஆகஸ்ட் 8ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் ரூ.4 லட்சம், கடந்த 13ம் தேதி மதுரை மாவட்டம் சிலைமான் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் ரூ.3 லட்சம் 22ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் வேலகௌண்டன்பட்டி டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் மூன்றரை லட்சம், 24ஆம் தேதி கரூர் மாவட்டம் வெள்ளியணை டாஸ்மாக் கடையில் ரூ.15,000, 27ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆசனூர் டாஸ்மாக் ஊழியர்களிடம் இரண்டரை லட்சம் ரூபாய் கொள்ளை, 5ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டம் பரவாய் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் ரூ.70,000 கொள்ளை, ஏழாம் தேதி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் டாஸ்மாக் கடையில் ஒரு லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் கொள்ளை. 

 

இப்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், கரூர், மதுரை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்களிடமும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர் பிடிப்பட்ட கொள்ளையர்கள். இப்படி ஐந்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கடந்த 3 மாதங்களில் டாஸ்மாக் ஊழியர்களை குறிவைத்து அவர்களை கத்தியால் வெட்டியும், மிளகாய் பொடி தூவியும், கத்தியை காட்டி மிரட்டியும் தொடர்கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

 

இந்த கொள்ளையர்களை பிடிப்பதற்காக மேற்கண்ட ஐந்து மாவட்ட போலீசாரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி ஜியாவுல் ஹக், தனிப்படை ஒன்றை அமைத்தார். அதில் கள்ளக்குறிச்சி  டி.எஸ்.பி இராமநாதன் மேற்பார்வையில் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமால், ஆரோக்கியதாஸ், தலைமை காவலர்கள் முருகன், சுரேஷ், தங்கதுரை, விஜய் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் டாஸ்மாக் கொள்ளையர்களை பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று தீவிரமாக தேடி வந்தனர். 

 

இந்த நிலையில் நேற்று காலையில் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் சேலம் கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வி.கூட்ரோடு அருகே ராயப்பனூர் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு பேர் பைக்கில் அதி வேகமாக வந்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பிடிபட்ட இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

 

அவர்களின் விசாரணையில் பிடிபட்ட இருவரும் தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா நாகத்தி என்ற கிராமத்தை சேர்ந்த பிரதீப் வயது 20, பிரசாந்த் வயது 19 என்பது தெரியவந்துள்ளது. மேலும் சின்னசேலம் டாஸ்மாக் விற்பனையாளர்கள் சுப்பிரமணியன் செல்வம் ஆகியோரைத் தாக்கி ரூ.2 லட்சத்து 27 ஆயிரம் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். இவர்கள் ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஜூலை மாதத்திலிருந்து தற்போது வரை 10 இடங்களில் டாஸ்மாக் ஊழியர்களின் நடமாட்டத்தை கண்காணித்தும் அவர்களை குறிவைத்தும் தொடர்க்கொள்ளை சம்பவத்தை நடத்தியுள்ளனர்.

 

மொத்தம் 8 மாவட்டங்களில் டாஸ்மாக் விற்பனையாளர்களைத் தாக்கி அவர்கள் மீது மிளகாய் பொடி தூவியும், அரிவாளால் வெட்டியும் பணம் கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிடிபட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 ஆயிரத்து 700 ரூபாய் பணம், ஒரு கத்தி ரூ.2 லட்சம் மதிப்புள்ள பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். கொள்ளையர்களை பிடித்தத்தனிப்படை போலீசாருக்கு விழுப்புரம் சரக டி.ஐ.ஜி எழிலரசன், கள்ளக்குறிச்சி எஸ்.பி ஜியாவுல் ஹக் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

 

மேலும் கொள்ளைச் சம்பவங்களில் இவர்களோடு சேர்ந்து ஈடுபட்ட திருவையாறு தாலுகா திருப்பந்துருத்தி கிராமத்தை சேர்ந்த ராஜகணபதி, சதாம் உசேன், நரி என்கிற அரவிந்த், சம்பத் ஆகியோருக்கும் தொடர்பிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களில் சம்பத் கடந்த வாரம் போலீசாரிடம் சிக்கியுள்ளார். அவருக்கு வலிப்பு ஏற்பட்டு ஒரு கை செயலிழந்த நிலையில் அவருக்கு கரோனா நோய்த்தொற்றும் ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 

 

பிடிபட்ட கொள்ளையர்களிடம் விசாரணை செய்வதற்காக விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், கரூர், மதுரை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் சின்னசேலம் காவல் நிலையம் வந்துள்ளனர். இவர்கள் தங்கள் பகுதியில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பிடிபட்ட இருவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இந்த இரு கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்து பிறகு நீதிமன்ற உத்தரவு பெற்று போலீஸ் கஸ்டடி எடுத்து மீண்டும் தீவிர விசாரணை செய்வதற்கு தயாராகி வருகின்றனர் போலீசார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.