திருப்பூரில்திருடியவீட்டிலேயேசெல்ஃபோனைவைத்துவிட்டு வந்ததால்கொள்ளையன் சிக்கிய சம்பம்நிகழ்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் மடத்துகுளத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டின் கதவு உடைக்கப்படாமலே பீரோவில் இருந்த முக்கால் பவுன் தங்க நகை திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த பொன்ராஜ், அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீசார்திருட்டு நடந்தவீட்டிற்குச் சென்றுவிசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது பொன்ராஜின் வீட்டில்புதிய செல்ஃபோன்ஒன்று கிடந்துள்ளது. அதனைக் கைப்பற்றி,போலீசார்மேற்கொண்டஆய்வில் அது பொன்ராஜின் நண்பரானநாகராஜ் என்பவரின் செல்ஃபோன் எனதெரியவந்தது.
அதனையடுத்து நாகராஜைகைது செய்தபோலீசார் அவரிடம் நடத்தியவிசாரணையில், நண்பர் பொன்ராஜ்வீட்டைப் பூட்டிவிட்டுசாவியை வைக்கும்இடத்தைத் தெரிந்துகொண்ட நாகராஜ், பொன்ராஜ் குடும்பத்துடன் வெளியே கிளம்பியபோது வீட்டைத் திறந்து நகை திருடியது தெரியவந்தது. மேலும் செல்ஃபோனைமறந்து உள்ளேயேவைத்துவிட்டதால் வசமாக சிக்கிக்கொண்டார் நாகராஜ்.