Skip to main content

தொடரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம்! போக்குவரத்துத் துண்டிப்பு! விளைநிலங்கள் நாசம்!

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

Roads flooded due to continuous heavy rains! Traffic Disruption! Destroy the agri land!

 

வடகிழக்குப் பருவமழை மற்றும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. அதிகபட்சமாக, சிதம்பரத்தில் 36 செ.மீ மழைப் பதிவானது. மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளிலிந்து 35,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். 1 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

 

கனமழை காரணமாக, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பண்ருட்டி அருகேயுள்ள நத்தம் கிராமத்தைச் சேர்ந்த, முருகன் என்பவரது மகள், 3-ஆம் வகுப்பு படிக்கும் சஞ்சனா(10) என்ற சிறுமி உயிரிழந்தார். பெரியகாட்டுப் பாளையத்தைச் சேர்ந்த தனமயில்(55) என்ற மூதாட்டியும் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.   

 

Roads flooded due to continuous heavy rains! Traffic Disruption! Destroy the agri land!

 

மாவட்டத்தில் கனமழை பொழிவதன் காரணமாக, வீராணம் ஏரி நிரம்பியதையடுத்து, 6,500 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, கிராம மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  குள்ளஞ்சாவடி பெருமாள் ஏரி நிரம்பியதால், ஏரியிலிருந்து வினாடிக்கு 9,400 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், கீழ்ப் பரவனாற்றின் கரையோரப் பகுதியிலுள்ள 23 கிராமங்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள கொளக்குடி கிராமத்தை, நீர் சூழ்ந்ததால் அக்கிராம மக்கள் வெளியேற முடியாமல் தவித்த நிலையில், கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் மேற்பார்வையில், பேரிடர் மீட்புக் குழு மற்றும் காவல்துறையினர் படகு மூலம், மக்களை மீட்டு பாதுகாப்பு முகாமில் தங்க வைத்தனர்.

 

Roads flooded due to continuous heavy rains! Traffic Disruption! Destroy the agri land!

 

திட்டக்குடி வெலிங்டன் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 15 அடியாக உயர்ந்துள்ளது. அதையடுத்து பாசனம் மற்றும் குடிநீருக்காக வெள்ளாற்றில் தண்ணீர் திறந்து விடக்கோரி, திட்டக்குடி – தொழுதூர் சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்தனர். 

 

கடலூர் - சிதம்பரம் சாலையில், காரைக்காடு பகுதியில் வெள்ளநீர் அதிகமாகச் செல்வதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் குள்ளஞ்சாவடி வழியாக மாற்றி விடப்பட்டன. குள்ளஞ்சாவடி - ஆலப்பாக்கம் சாலையிலும் வெள்ளநீர் செல்வதால் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டது. இதேபோல் பரவனாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், வடலூர் - சேத்தியாத்தோப்பு சாலையில், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

 

விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏரி, குளங்கள் வேகமாக நிரம்புவதாலும், வடிகால் வாய்க்கால்கள் பராமரிக்கப்படாததாலும் விளை நிலங்களிலும், கிராமப் பகுதிகளிலுள்ள தெருக்கள் மற்றும் வீடுகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. வீடுகளில் சூழ்ந்துள்ள நீரை வெளியேற்றவும், வடிகால்களைச் சரி செய்யவும் கோரி, சித்தலூர் மக்கள் விருத்தாசலம் புறவழிச்சாலையில் மறியல் செய்தனர்.

 

Roads flooded due to continuous heavy rains! Traffic Disruption! Destroy the agri land!

 

வெள்ளாற்றில் பெண்ணாடம் அருகே செளந்தர சோழபுரத்தில் அரியலூர் – கடலூர் மாவட்டத்தை இணைக்கும் தரைப்பாலம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் இரு மாவட்டங்களைச் சேர்ந்த 25 -க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கிடையேயான போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது.

 

மன்னம்பாடி கிராம ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், உபரி நீர் ஓடையின் வழியாகச் செல்வதினால் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இடையே போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டது.

 

cnc


நெய்வேலி என்.எல்.சி சுரங்கப் பகுதிகளில் நீர் நிரம்பியுள்ளதால், நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், சுரங்கப் பகுதிகளின் மண் மேட்டிலிருந்து கரைந்துவரும் மண் கலந்தநீரால் கம்மாபுரம், கோபாலபுரம், கீனனூர், கொம்பாடிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலுள்ள 1,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட நெற்பயிர்கள் நாசமடைந்துள்ளன.

 

Roads flooded due to continuous heavy rains! Traffic Disruption! Destroy the agri land!

 

மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்கள், தண்ணீரில் மூழ்கியதால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.

 

“தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான முகாம்களில் தங்கவேண்டும்” என்று மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.