Skip to main content

மீத்தேன் கொண்டு செல்ல ஆற்றை தூர்த்து சாலை? ஆற்றின் கணக்கை கேட்டு தாம்பூலம் வைத்து அதிகாரிக்கு அழைப்பு கொடுத்த டிஆர்பி.ராஜா எம்எல்ஏ!

Published on 07/06/2019 | Edited on 07/06/2019

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள முழு விவசாய கிராமம் பேரையூர். அந்த கிராமத்தில் காலங்காலமாக காவிரித் தண்ணீர் பாய்ந்து நெல் விவசாயம் செழித்திருந்தது. ஆழ்குழாய் பாசனம் குறைவாக உள்ள பகுதி. இந்தநிலையில் கடந்த மாதம் முதல் திடீரென அந்தப் பகுதியில் அகலமான சாலை அமைக்கும் பணி நடக்கிறது. சாலைப் பணிக்காக ஆற்றை தூர்த்து சாலை அமைக்கப்பட்டு வருகிறது. 

 

Road on the river? TRP Raja MLA calling official

 

இதுகுறித்து அந்தப் பகுதி விவசாயிகள் கேட்டும் எந்த பதிலும் கிடைக்காததால் தொகுதி திமுக எம் எல் ஏ டி.ஆர்.பி.ராஜாவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இன்று காலை அந்தப் பகுதிக்குச் சென்ற எம்எல்ஏ பணி விபரம் குறித்த பதாகை இல்லாமல் சில அதிகாரிகளிடம் கேட்க நபார்டு திட்டத்தில் சாலை என்று மட்டும் பதில் கூறியுள்ளனர். மேலும் நீர்வழிப்பாதையை அடைத்து சாலை அமைக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு எந்த அதிகாரியும் பதில் சொல்லவில்லை. அதனால் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு ஆற்றின் அகலம் என்ன என்பதை அறிய வேண்டும் எப் எம்பி கணக்குடன் வாருங்கள் என்று அழைத்துள்ளார். ஆனால் அந்தப் பக்கமே வராத கிராம நிர்வாக அலுவலர் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கொண்டார். 3 முறை அழைத்தும் வராததால் ஆற்றின் அளவை எம்எல்ஏவே அளந்து பார்த்துவிட்டு மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் சென்று தாம்பூலத்தில் பழம், பூ, வெற்றிலை பாக்கு வைத்துக் கொண்டு கிராம நிர்வாக அலுவலருக்காக நீண்ட நேரம் காத்திருந்தார்.

 

Road on the river? TRP Raja MLA calling official

 

அப்போது துணை தாசில்தார் உள்பட பலரும் எம்எல்ஏவிடம் சமாதானம் செய்தனர். ஆனால் கிராம நிர்வாக அலுவலரை நாளை ஆற்றை அளக்க கணக்குடன் வருமாறு தாம்பூலம் கொடுத்து நேரில் அழைக்க வேண்டும் என்று காத்திருந்தார். அதன் பிறகு உள்ளிருந்து வெளியே வந்த கிராம நிர்வாக அலுவலரிடம் தாம்பூலம் கொடுத்து நாளை காலை 10 மணிக்கு அதிகாரிகள் வருகிறார்கள அதனால நீங்களும் தவறாமல் கிராம கணக்குடன் வரவேண்டும் என்று  அழைப்புக் கொடுத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Road on the river? TRP Raja MLA calling official


 

இது குறித்து மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ  கூறும் போது.. எனது தொகுதிக்குள் விவசாயத்திற்கு தண்ணீர் பாயும் ஆற்றை தூர்த்து சாலை அமைப்பதாக கிராம மக்கள் சொன்னார்கள் வந்து பார்த்தேன். எந்த திட்டத்தில் சாலை பணி எதற்காக பணி என்ற எந்த பதாகையும் இல்லாமல் வேலை நடக்கிறது. அதனால் எனக்கு சந்தேகமாக உள்ளது. அதாவது மீத்தேன் அரக்கனை கொண்டு வந்து எங்கள் விவசாயத்தை அழித்து இயற்கை வளங்களை கொண்டு செல்ல இந்த சாலை அமைக்கப்படுகிறதா என்ற சந்தேகம் உள்ளது. மேலும்  தண்ணீர் பாய்ந்தால் தானே விவசாயம் நடக்கும் என்பதால் திட்டமிட்டே விவசாயத்திற்கு தண்ணீர் பாயும் ஆற்றின் அளவை குறைப்பதாக நினைக்கிறேன். 

 

 

அருகில் உள்ள பாலம் 19 மீட்டர் அளவில் உள்ளது. 3 கண்களில் தண்ணீர் செல்கிறது. ஆனால் இப்போது 4 மீட்டர் அளவு கூட ஆறு இல்லை. இதனால் வெள்ள காலங்களில் பெரும் பாதிப்பு வரும் விவசாய காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை வரும். அதனால தான் ஆற்றின் அளவை காண கிராம கணக்கை எடுத்து வர கேட்டோம் கிராம நிர்வாக அலுவலர் வரவில்லை. இப்ப தாம்பூலம் வைத்து அழைத்திருக்கிறோம். நாளை நிச்சயம் வருவார் என நம்புகிறோம். எந்த சூழ்நிலையில் விவசாயத்தையும் விளைநிலங்களையும் அழிக்கவிடமாட்டோம் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்; பரப்புரையைத் தொடங்கும் முதல்வர்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Parliamentary elections approaching The CM mk stalin will start the campaign

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16-03-2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன. தி.மு.க. தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார்.

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் மீண்டும் கே. சுப்பராயன் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜ் போட்டியிட உள்ளார். நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் திமுக - காங்கிரஸ் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Parliamentary elections approaching The CM mk stalin will start the campaign

இந்நிலையில். திருச்சியில் வரும் 22 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்க உள்ளார். இதனையடுத்து 23 ஆம் தேதி திருவாரூரில் பரப்புரையை மேற்கொள்ள உள்ளார். அதே சமயம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் மார்ச் 24 ஆம் தேதி தனது பரப்புரையைத் தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.