








Published on 14/01/2022 | Edited on 14/01/2022
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், மகாலிங்கம் சாலை, வாரன்ஸ் சாலை மழையின் காரணமாக சேதமடைந்ததால், புதிய சாலை அமைக்கும் பணிகளை நேற்று (13/01/2022) இரவு நேரில் சென்று பார்வையிட்டு, திடீர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, அரசு முதன்மைச் செயலாளர்/ பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப., தெற்கு வட்டார துணை ஆணையாளர் ஷேக் அப்துல் ரகுமான் இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.