Skip to main content

விதிமுறைபடி அமைக்காத சாலை! தொடரும் விபத்துக்கள்! மறியலில் இறங்கிய மக்கள்!

Published on 23/04/2022 | Edited on 23/04/2022

 

Road not paved! Accidents to follow! People who landed at the picket!

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தில் இருந்து ஜம்னாமத்தூர் செல்லும் மலைச் சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்டது. இந்தச் சாலையில் ஏப்ரல் 23ஆம் தேதி காலை விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. காலை 11 மணியளவில் ஆலங்காயம் டூ காவலூர் சாலையில் ஆர்.எம்.எஸ் புதூர் அருகே நொசகுட்டை என்ற இடத்தில் லாரி ஒருப்பக்கமாக சாய்ந்து ரோட்டில் கவிழ்ந்தது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் மலைச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


பழைய சாலையை அகற்றிவிட்டு புதியசாலை அமைக்க வேண்டும் என்பது நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் உத்தரவு. அப்படி இங்கு செய்யாமல் ஏற்கனவே இருந்த தார்சாலையின் மீது புதிய தார்சாலை அமைக்கப்பட்டதால் ஒரு அடிக்கும் அதிகமாக பக்கவாட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.


இதனால் தார்ரோட்டில் இருந்து தவறி மண்சாலையில் வாகனம் இறங்கிவிட்டால் மீண்டும் மேலே ஏற்றுவதற்கு வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமமாக இருந்துவருகிறது. இதனை மண்ணைக் கொட்டி தற்காலிகமாக சரிச்செய்யுங்கள் என அந்தச் சாலையை பயன்படுத்தும் அப்பகுதி கிராம மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துவந்துள்ளனர்.

 

Road not paved! Accidents to follow! People who landed at the picket!

 

கடந்த சில தினங்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை மழை பெய்துவருகிறது. அப்படி மழை பெய்யும் நாட்களில் இந்தச் சாலையில் சென்ற பலர் கீழே விழுந்துள்ளனர். அதில் அவர்களுக்கு அடியும் பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது கோபத்தில் இருந்தனர்.


இந்நிலையில் தான், விவசாயிகளிடமிருந்து நெல் ஏற்றிச்சென்ற லாரி கீழே விழுந்துள்ளது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் ஆத்திரமடைந்தது சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர். இதனால் மலைப்பாதையில் ஒருகிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் வாகனங்கள் தேங்கி நின்றது. இதனால் இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


பின்னர் காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் வருகை தந்து விரைவில் இந்தச் சாலையை சரி செய்துவிடுகிறோம் என வாக்குறுதி தந்தபின்பே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.டி. ரெய்டில் ரூ. 40 லட்சம் பறிமுதல்; திருப்பத்தூரில் பரபரப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
IT Raid Rs. 40 lakh forfeited; Busy in Tiruppathur

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதே சமயம் திருப்பத்தூர் மாவட்டம் திருநாதர் முதலியார் என்ற பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் போட்டோ ஸ்டுடியோ, ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி. ரமேஷின் அக்காள் மருமகன் ஆவார். இத்தகைய சூழலில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்து வருமான வரித்துறையினருக்கு தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நவீன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது ரூ. 40 லட்சம் ரொக்கம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்திலும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  வருமான வரித்துறை சோத்னையின் மூலம்  ரூ. 40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மாற்றுத்திறனாளி சிறுவனை தனியார் பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துநர்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
conductor refused to board the differently-abled son in the private bus

திருப்பத்தூர் மாவட்டம், விசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குப்தா. இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு 14 வயதில் மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இவரை இன்று இவருடைய அம்மா வெண்ணிலா திருப்பத்தூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மீண்டும் விசமங்கலத்தில் உள்ள வீட்டிற்குச் செல்வதற்காக திருவண்ணாமலை செல்லும் தனியார் பேருந்தில் மாற்றுத்திறனாளியான மகனை ஏற்றி சீட்டில் உட்கார வைத்துள்ளார். அப்போது மாற்றுத்திறனாளி மகனைத் தனியார் பேருந்தின் நடத்துநர் கீழே இறக்கி விட்டுள்ளார். 

ஆத்திரம் அடைந்த அவரின் தாயார் வெண்ணிலா மற்றொரு பேருந்தில் விசமங்கலம் பகுதிக்கு வந்து சாலையில் கல்லை வைத்து கையில் பெட்ரோல் கேனுடன் திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டார்.

conductor refused to board the differently-abled son in the private bus

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆய்வாளர் ரேகா மதி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.