Skip to main content

பாதிக்குப் பாதி கொள்ளை!- ரோடு பர்னிச்சர் ஊழல்!

Published on 29/07/2020 | Edited on 29/07/2020

 

“நெடுஞ்சாலைத்துறையில் மலிந்துள்ள ஊழலும், முறைகேடுகளும் கணக்கிலடங்காதவை. அதனைச் சொல்லி மாளாது.” என்று குமுறலோடு விவரித்தார், அத்துறையில் பணியாற்றும் நேர்மையான பொறியாளர் ஒருவர்.

‘ரோடு பர்னிச்சர்’ என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ.200 கோடி வரை ஊழல் நடக்கிறது. இது, பெரிய அளவில் வெளியில் தெரிவதில்லை. தமிழகம் முழுவதும், நெடுஞ்சாலைத்துறையில் உள்ள அலுவலகங்கள் மூலம், ஆண்டுதோறும் ஒப்பந்தம் கோரப்படுகிறது. அந்த ஒப்பந்தங்களில், எந்தெந்த பொருட்களுக்கு, என்ன விலை நிர்ணயம் செய்யப்படுகிறது தெரியுமா? சாம்பிளுக்கு சில…

*அலுமினியத்தாலான, சாலையோரத் தடுப்பு (Metal crash) சுவர் – மீட்டர்  ஒன்றுக்கு ரூ.5,864/-

*சாலையோரத்தில் சிறிய போஸ்ட் போல ஊன்றப்படும் Delineator-ன் விலை ரூ.2,215/-

*பாலங்கள் மற்றும் சில பகுதிகளில், ஊன்றப்படும் கறுப்பு – மஞ்சள் போர்டு (Hazard Marker) ஒன்றின் விலை ரூ.3,342/-

*சாலையில் பதிக்கப்படும், இரவு நேரங்களில் ஒளிரும் குமிழ் (Stud) ஒன்றின் விலை ரூ.414/-

மேற்கண்ட பொருட்களின் சந்தை மதிப்பு என்னவென்று கேட்டால்,  தலை சுற்றும். ஏனென்றால், ஒப்பந்தத்தில் 50 சதவீதம் அதிக விலை வைத்தே நிர்ணயிக்கின்றனர்.
 

இந்த பர்னிச்சர் ஒப்பந்தங்களை, புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரே ஒப்பந்தகாரர், நான்கு நிறுவனங்களின் பெயரில் மாற்றி மாற்றி எடுக்கிறார். இவர், தமிழகத்தின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவருக்கு வேண்டியவர் என்பதால், ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அலுவலகங்களும், இவருக்கு குறைந்தபட்சம் ரூ.200 கோடி வரை மதிப்பீடுகளைத் தந்தே ஆகவேண்டும் என்பது மேலிடத்து உத்தரவு. இதனால், வாங்கிய பொருட்களையே,  திரும்பத் திரும்ப வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பொருட்களைப் பராமரிக்கும் வரவு-செலவு பதிவேடுகள் எந்த அலுவலகத்திலும் இல்லை. அதுவே, இந்த ஊழலை மறைப்பதற்கு வசதியாக இருக்கிறது. ஆனாலும், எட்டு தலைமைப் பொறியாளர்கள் ஒன்றுகூடி, பர்னிச்சர் பொருட்களுக்கு விலை நிர்ணயித்து, துறையின் வெப்சைட்டில் வெளியிடவே செய்கின்றனர்.
 

http://onelink.to/nknapp

 

எந்தக் கவலையும் இல்லாமல், இத்துறையில் ஊழல் தொடரவே செய்கிறது. ரூ.50 கோடிக்கும் மேல் உள்ள பணிகளுக்கு மட்டுமே அறிவிப்பு போர்டு வைக்கப்படுகிறது. மற்ற பணிகளுக்கு அறிவிப்பு போர்டு வைப்பது இல்லை. தமிழக முதல்வர் இத்துறைக்கு அமைச்சர் என்பதால், முறைகேடுகள் குறித்து யாரும் வாய் திறப்பதில்லை.

நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்களில், பர்னிச்சர் பொருட்கள் கேட்பாரற்று கிடப்பதை, போகிற போக்கிலேயே காணமுடியும். மக்களின் வரிப்பணத்தை, அநியாயத்துக்கு விரயம் செய்கின்றனர்!  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.