வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் இன்று (26/11/2021) சிலமாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை அதிகமாக பெய்து வருகிறது. அந்த வகையில் கேகே நகர் ராஜமன்னார் சாலை, அசோக் நகர் 18வது அவென்யூ சாலை உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. கேகே நகரில் மழைநீர் தேங்கியதால் அந்த சாலை முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அடைக்கப்பட்டது.