Skip to main content

சிதம்பரத்தில் வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்

Published on 19/08/2022 | Edited on 19/08/2022

 

hgjh

 

சிதம்பரம் லப்பை தெரு பள்ளி வாசலில் பணம் வசூல் செய்வதில் முறைகேடுகள் நடப்பதாக பள்ளிவாசல் நிர்வாகத்தில் உள்ள ஜியாவுதீன், ஜாகிர் உசேன், ஹலீம் ஆகியோர் மீது அதே பள்ளிவாசலில் உறுப்பினராக உள்ள சாகுல் என்பவர் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில்  மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


 
வழக்கு பதிவுசெய்யப்பட்டதை கண்டித்தும், விசாரணை இன்றி பதிவு செய்யப்பட்ட  போலி வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி சிதம்பரம் பகுதியில் உள்ள அனைத்து ஜமாத் கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை மதியம் சிதம்பரம் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட 200-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். அப்போது காவல்துறையினர் இவர்களை சிதம்பர நகர காவல் நிலையம் முன்பு பேரிக்காடு அமைத்து தடுத்து நிறுத்தினர்.  அதனைத் தொடர்ந்து அனைவரும் பிரதான சாலையாக உள்ள மேலவீதியில் தரையில் அமர்ந்து காவல்துறையை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

 

மேலும் பள்ளிவாசல் சொத்துகளை அபகரிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுவதால் அதனை தடுப்பதால் இது போன்ற வழக்குகள் போடுவதாகவும் குற்றம் சாட்டி கோஷங்களை எழுப்பினார்கள்.  மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் போக்குவரத்தை மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தினர். தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற மறியல் போராட்டத்தால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் போராட்டக்காரர்களிடம் வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்வதாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்தார். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தொடங்கிய வெயிலின் தாக்கம்; அறநிலையத்துறை வெளியிட்ட குளுகுளு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Free Water Butter in 48 Temples

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 48 கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தற்போதே கோடை காலத்திற்கான வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பாக தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க தமிழக அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் நாளை முதல் நீர்மோர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி நாளை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.