Skip to main content

பள்ளி மாணவ மாணவிகளிடையே பிரிவினை மோதல்! -சாலை மறியல் பதற்றம்!

Published on 27/02/2019 | Edited on 27/02/2019

 

இராஜபாளையம் -  சேத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தென்காசி சாலையில் 2 மணி நேரம் மறியல் நடத்தியதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

விருதுநகர் மாவட்டம் -  ராஜபாளையம் அருகிலுள்ள  சேத்தூர் கிராமத்தில் சேத்தூர் சேவுக பாண்டியன் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சேத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து வரும் மாணவர்கள் படிக்கின்றனர். 

 

school


நேற்று இங்கு பயிலும் மாணவ மாணவிகளில் ஒரு பிரிவினரை இன்னொரு பிரிவினர் அசிங்கமாகத் திட்டியிருக்கின்றனர். பள்ளி ஆசிரியரிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காததால்,  ஆசிரியரைக் கண்டித்தும்,  அவதூறாகப் பேசிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராஜபாளையத்திலிருந்து செங்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அவமானத்துக்கு ஆளானதாகக் கூறப்படும் மாணவிகள் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  அதனால், சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் செய்தனர்.
 

காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும், சாலை மறியலைக் கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இப்பகுதியில்  பதட்டம் நிலவி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடலூர் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியல்  

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

People struggle road on Cuddalore-Chidambaram National Highway!

 

கடலூர் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆலப்பாக்கம் கிராமம் அருகே மேம்பாலம் அமைத்துத் தரக்கோரி நெடுஞ்சாலைத்துறை மற்றும் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

 

இதனைத் தொடர்ந்து, கடலூர்-சிதம்பரம் சாலையில் ஆலப்பாக்கம் என்ற இடத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுரங்கப்பாதை, பேருந்து நிழற்குடை, இணைப்பு சாலை வசதி செய்து தர வலியுறுத்தி வெள்ளிக்கிழமை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையறிந்த சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி, காவல் ஆய்வாளர் வினோதா ஆகியோர் கோரிக்கை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேச்சுவார்த்தை நடத்தி சாலைமறியல் போராட்டத்தைக் கலைந்து போகச்செய்தனர்.

 

 

Next Story

நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

Villagers block road near Sirkazhi demanding relief

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு கிராமத்தில் கனமழையால் வீடுகள் தண்ணீரில் மூழ்கின. இப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வந்தது.

 

தற்போது ஓரளவு தண்ணீர் வடிந்த நிலையில் வீட்டிற்குத் திரும்பினர். ஆனால், தங்கள் பகுதிகளுக்கு அதிகாரிகளோ அமைச்சர்களோ யாரும் பார்க்க வரவில்லை. நிவாரணமும் வழங்கவில்லை. மழையால் வாழ்வாதாரம் மொத்தமும் இழந்து சமைப்பதற்குக் கூட பொருட்கள் இல்லாமல் குழந்தைகளை வைத்துக் கொண்டு சிரமப்படுவதாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் சீர்காழி - நாகப்பட்டினம் சாலையில் திடீரென ஒன்றுகூடி சாலைமறியலில் ஈடுபட்டனர்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி வட்டாட்சியர், அனைவருக்கும் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார் என அப்பகுதி மக்களுக்கு எடுத்துக் கூறியதன் பிறகு மறியலை விலக்கிக்கொண்டனர்.