Skip to main content

2021ல் சாலை விபத்துகள்: தேசிய குற்ற ஆவணக் காப்பகம் பட்டியல் வெளியீடு - தமிழகத்தின் இடம்?

Published on 30/08/2022 | Edited on 30/08/2022

 

Road accidents in 2021; rank of Tamil Nadu?

 

கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் நடந்த சாலை விபத்துகளில் 16,685 பேர் இறந்துள்ளதாக சமீபத்தில் வெளியான அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது.

 

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் 2021ம் ஆண்டில் நடந்த கொலைகள், தற்கொலைகள், சாலை விபத்துகள், பாலியல் வன்கொடுமைகள்  போன்ற  பல்வேறு அடிப்படைகளில் மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அதிகம் நடைபெறும் சாலை விபத்து மரணங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

நாடு முழுதும் சாலை விபத்துகளில் ஏற்பட்ட மரணங்கள் பற்றிய தரவுகளை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் சாலை விபத்துகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அதன் படி, 2021ம் ஆண்டில் சாலை, ரயில் மற்றும் சாலையை கடந்து செல்லும் போது ஏற்பட்ட விபத்துகளில் இந்தியாவில் 1.73 பேர் இறந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக உத்திரப்  பிரதேசம் முதலிடத்திலும் இரண்டாம் இடத்தில் தமிழ்நாடும் உள்ளது. உத்திரபிரதேசத்தில் 24,711 மரணங்களும் தமிழகத்தில் 16,685 பேரும் போக்குவரத்து விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். மூன்றாம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. இங்கு 16446 பேர் விபத்துகளில் மரணம் அடைந்துள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.