Skip to main content

காற்று மாசை கட்டுப்படுத்துமா மத்திய, மாநில அரசுகள்?

Published on 22/04/2020 | Edited on 22/04/2020

2016ல் இந்திய சாலைகள் பயணித்த வாகனங்களின் எண்ணிக்கை 23கோடி. இப்போது அதன் எண்ணிக்கை சற்று கூடி இருக்கும். அப்படி 24 மணிநேரமும் வாகனங்கள் பயணித்த மாநில, தேசிய, கிராம சாலைகள் இப்போது தன் கருத்த மேனியை நீட்டி படுத்து ஓய்வெடுத்துவருகின்றன. அதேபோல் தொழிற்சாலைகளில் இயங்கிய இயந்திரங்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றன.

r

இதனால் உற்பத்தி தேக்கம், அடித்தட்டுமக்களின் திண்டாட்டம் ஒரு பக்கம், பொருளாதார வளர்ச்சி பின்னடைவு மறுபக்கம். காரணம் இந்த கொரோனா வைரஸ் பரவல். இதில் கூட மனிதனுக்கு நல்லவையும் நடந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 92 பெரிய நகரங்களில், 39 நகரங்களில் காற்றின் மாசு வெகுவாக குறைந்துள்ளது என ‘கேர் ஃபார் ஏர்’ என்ற அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. அவர்களின் ஆய்வில் காற்றின் மாசு 100 200 என இருந்தால் அது சுவாசிப்பதற்க்கு ஏற்றது அல்ல. அப்படியிருந்த காற்று மாசு இப்போது டெல்லியில் 68, சென்னை 49, பெங்களூர் 65, மும்பை 71, திருவனந்தபுரம் 45, திருப்பதி 71 லக்னோ 63, வாரணாசி 53, அமிர்தசரர் 68 என காற்றின் மாசு குறைந்துள்ளது. 
 

 nakkheeran app



காற்றின் மாசுவை 100, 200 என்ற புள்ளிக்கணக்கில் கணக்கிடுவார்கள் 50 புள்ளி இருந்தால் அது மனிதன் சுவாசிக்ககூடியது எனவும் அதற்குமேல் எந்த அளவு காற்றில் மாசு கூடுகிறதோ அந்த அளவிற்கு மனிதர்களுக்கு சுவாசிப்பதன் மூலம் உடல் பாதிப்பு ஏற்ப்படுகிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் நைட்ரஜன் ஆக்சைடு அதிகரிக்கும் போது மனிதர்களுக்கு சுவாசபிரச்சனை, அதன்மூலம் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நல்ல காற்றை சுவாசிக்க முடியாமல், பெருநகரங்களில் பணம்கொடுத்து நல்ல காற்றை சுவாசிக்க ஆஸ்சிஜன் பார்லர்களை தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள் வசதியானவர்கள்.

ஆனால் ஏழை எளிய மக்கள் என்ன செய்வார்கள்? தற்போது அரசின் தடை உத்தரவால் வாகன போக்குவரத்து, தொழிற்சாலைகள் ஆகியவற்றால் வெளிவரும் புகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் நைட்ரஜன் ஆக்சைடு அளவு குறைந்து மனிதர்கள் நல்லகாற்றை சுவாசிக்கிறார்கள். உதாரணமாக இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு காற்று மாசுவினால் சாலைகளில் மக்கள் பயணிக்க முடியாமலும், அங்கு வசிக்கும் மக்கள் அந்த காற்றை சுவாசிக்க முடியாமலும் திணறினார்கள். இதனால் டெல்லி அரசு சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கு சிஃப்ட்டு முறையை கொண்டு வந்தது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இது பற்றி ஆய்வு செய்த கேர் ஃபார் ஏர் அமைப்பின் இணை நிறுவனரும், மேற்படி தகவல்களை வெளியிட்டவருமான ஜோதிபாண்டேலாவாகரே மேலும் கூறுகையில்,  காற்று மாசுவிலிருந்து மனிதர்களை காப்பாற்றும் அதே நேரத்தில் பொருளாதாரத்தில் மந்த நிலை வந்திருக்க தேவையில்லை, அது ஏற்றதும் அல்ல.

அதேநேரத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாகனங்களில் இருந்தும், தொழிற்சாலைகளில் இருந்தும் வெளிவரும் மாசுவின் தரத்தை கட்டுப்படுத்தி மனிதர்கள் சுவாசிக்கக்கூடிய அளவிற்கு கொண்டுவரவேண்டும் என்கிறார். இதுபற்றி நெய்வேலி இயற்கை ஆர்வலர் ஆதித்யாசெல்வம், “எதிற்காலத்தில் தொழிற்சாலைகள் இயக்கத்திலும், வாகனங்கள் இயக்கத்திலும் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்டுவந்து காற்றுமாசை குறைக்கவேண்டும். மேலும் ஏற்கனவே சாலைகளில் செல்லும் வாகனங்கள் தரமற்றவையாக உள்ளதால் அவை மூலம் வெளியேறும் புகை அதிக மாசை உண்டாக்குகிறது. புதுப்புது வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளன. அதை கட்டுப்படுத்த வேண்டும். 

வாகன எண்ணிக்கை அளவிற்கு அவைகள் பயணிக்க சாலைகள் இல்லை. மேலும் பெட்ரோல், டீசல் பயன்படுத்தாமல் மின்சாரம் மூலம் செல்லும் வாகனங்களை உருவாக்கவேண்டும். ஏற்கனவே பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களில், ஆயட்காலம் முடிந்த வாகனங்களை முடக்கவேண்டும். இப்படிசெய்வதன் மூலம் இனிவரும் தலைமுறையினர் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்க முடியும். வரும் தலைமுறையினருக்கு சொத்து, சுகத்தை விட்டுசெல்கிறோமோ இல்லையோ, நல்ல காற்றை விட்டுசெல்ல வேண்டும். இது கரோனோ வைரஸ் நமக்கு சொல்லித்தரும் பாடமாக எடுத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.

வாகனங்களும், தொழிற்சாலைகளும் 21 நாட்கள் ஓய்வுக்கு பிறகு முன்பைவிட அதிக வேகமெடுத்து பயணித்து உற்பத்தியை துவங்க உள்ளன. இதன் மூலம் காற்று மாசும் மீண்டும் அதிகரிக்கவே செய்யும். அதனால் மத்திய, மாநில அரசுகள் காற்று மாசுவை குறைக்க கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.


                    

சார்ந்த செய்திகள்

Next Story

விசாரணைக் கைதி மரணம்; சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
madurai youth karthi incident Relatives involved in the road block

மதுரை மாவட்டம் மதிச்சியம் என்ற பகுதியில் கார்த்திக் (வயது 30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார். இத்தகைய சூழலில் வழிப்பறி வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் போலீசாரால் கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் 3 ஆம் தேதி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, மருத்துவ தகுதிச் சான்று வழங்கப்பட்ட பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து 4 ஆம் தேதி திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட ஒரே நாளில் சிறையில் இருந்து உடல் நலக்குறைவால் விசாரணை சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும் கார்த்திக் உயிரிழப்புக்கு காவல்துறையினரே காரணம் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். 

madurai youth karthi incident Relatives involved in the road block

இந்நிலையில் இளைஞரின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியும், உரிய நிவாரணம் அளிக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே இன்று (07.04.2024) சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

Next Story

இரவில் நடப்பது என்ன? பாண்டிச்சேரி டூ திண்டிவனம் சாலையில் பரபரப்பு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Late night thefts on Pondicherry to Tindivanam road

பாண்டிச்சேரி வார இறுதி நாட்களில் எந்த அளவுக்கு பிரபலமானது என்பது அனைவரும் அறிந்ததே. அதே அளவுக்கு முக்கியமானது பாண்டிச்சேரி டூ திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். சென்னை செல்லும் வாகனங்களும், பெங்களூரூ திருவண்ணாமலை, செஞ்சி போன்ற நகரங்களுக்கு செல்லும் வாகனங்களும் இந்த சாலையை தான் பிரதானமாக பயன்படுத்துகின்றன. எப்பொழுதும் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும்.

இந்த சாலையில் பாண்டிச்சேரி நுழைவாயிலில் இந்தியாவின் பிரபலமான ஜிப்மர் மருத்துவமனை உள்ளது, இந்த மருத்துவமனைக்கு திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் இருந்து நோயாளிகள் வருகின்றனர். அதில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த சாலையை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். 

இந்த சாலையில் தான் இப்பொழுது திட்டமிட்டு இரவு நேரங்களில் குறிப்பாக விடியற்காலை நேரத்தில் வாகனங்களை மறித்து கொள்ளை நடப்பதாக நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கள் தங்களது அனுபவங்களை, சக வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை பதிவாக சமூக ஊடங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் முறையிட்ட போது அவர்கள் நாங்கள் கவனிக்கிறோம் என சொல்கிறார்களே தவிர அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்கிறார்கள. தேசிய நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும், அவசர தொடர்புக்கு சுங்கச்சாவடியை தொடர்புகொள்ளும் வசதியை உருவாக்கி வைக்கவேண்டும் என்கிற  நெடுஞ்சாலைத்துறை விதி, சாலையைப் பாதுகாப்பது கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகளின் பொறுப்பு எனக்கூறுகிறது. ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்வதில்லை, சாலையை மட்டும் தான் பராமரிப்போம் என்கிறார்கள்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி பாண்டிச்சேரிக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்துபவர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். அது 2021 ஆம் ஆண்டு வெளியான பழைய ஆடியோ இப்போது அப்படியல்ல, அங்கு இரவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்கிற தகவல் பரப்பப்படுகிறது.