மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மூலப்பொருட்களின் விலையேற்றமும் தட்டுப்பாடும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களைத் தள்ளாட வைத்திருக்கின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் போராட்டத்தைக் கண்டும் காணாதிருக்கும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.