Skip to main content

கல்விக்கடன் கிடைக்காமல் தவித்த மாணவி; களத்தில் இறங்கிய திமுக எம்எல்ஏ

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

rishivandiyam dmk mla solved for nursing student education loan issue 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் வசந்தம் கார்த்திகேயன். மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் தீவிர கவனம் செலுத்தும் முதன்மையான சட்டமன்ற உறுப்பினர்களில் வசந்தன் கார்த்திகேயனும் ஒருவர். அவரது தொகுதியில் வறிய நிலையில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் இப்படிப்பட்டவர்களுக்கு அரசு திட்டங்களை கொண்டுசேர்ப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

 

அந்த வகையில் சங்கராபுரம் அருகே உள்ள சின்னகொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கனகராஜ். இவரது மகள் சுஷ்மிதா. இவர் திருச்சி சமயபுரம் அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் பட்டப்படிப்பு படித்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சுஷ்மிதா முழு அளவில் பணம் செலவு செய்து படிக்க முடியாத நிலையில் இருந்தார். எனவே அவர் படிப்புக்கு கல்விக்கடன் கொடுத்து உதவி செய்யுமாறு பகண்டை கூட்டு சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். வங்கி மேலாளர் சுஷ்மிதாவிற்கு கல்விக்கடன் வழங்குவதற்கு மிகுந்த தாமதம் செய்து வந்துள்ளார்.

 

இந்நிலையில், எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சிக்காக அப்பகுதிக்கு சென்றுள்ளார். எம்எல்ஏ வந்திருக்கும் தகவல் அந்த மாணவி சுஷ்மிதாவிற்கு தெரியவந்தது. அங்கு சென்று சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனை மாணவி நேரில் சந்தித்து தனது படிப்பிற்கு வங்கி கடன் உதவி செய்து தராமல் இழுத்தடிப்பது குறித்து முறையிட்டுள்ளார். அதைக் கேட்டு மனம் வருந்திய எம்எல்ஏ மாணவி சுஷ்மிதாவை கையுடன் அழைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று வங்கி மேலாளரிடம் மாணவிக்கு கல்விக்கடன் தராதது குறித்து விவரம் கேட்டுள்ளார்.

 

அதோடு மாவட்ட ஆட்சியர் சரவண்குமாரிடம் மாணவி நிலை குறித்து எடுத்து கூறினார். அதோடு உடனே மாவட்ட ஆட்சியர் சரவண்குமாரிடம் சம்பந்தப்பட்ட இந்தியன் வங்கியின் மண்டல மேலாளரிடம் இது குறித்து விவரம் தெரிவிக்கக் கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர் உடனடியாக சம்பந்தப்பட்ட இந்தியன் வங்கி மண்டல மேலாளரிடம் மாணவி நிலை குறித்து எடுத்துக் கூறியுள்ளார். இந்த தொடர் நடவடிக்கையின் காரணமாக மாணவிக்கு கல்விக்கடன் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஒரு மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு மாணவிக்கு கல்விக்கடன் வழங்க வங்கி முன்வந்தது. மாணவி சுஷ்மிதா எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கண்ணீர் வழிய நன்றி தெரிவித்துள்ளார். இது போன்று பாதிக்கப்படும் மக்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பதில் எம்எல்ஏ தீவிர கவனம் செலுத்தி வருவதாக கட்சியினர் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.