Skip to main content

“மதுரை சிறையில் கலவரம் நடக்கவில்லை!” -சிறை அதிகாரிகள் மீது காவல்துறை கரிசனம்!

Published on 25/04/2019 | Edited on 25/04/2019


“கைதிகள் கலவரத்துக்குப் பின்னும் மதுரை மத்திய சிறைச்சாலை இன்னும் திருந்தியபாடில்லை..” என்று ‘உச்’ கொட்டுகிறார்கள் அச்சிறை வட்டாரத்தில்.

 

என்ன வருத்தமாம்?

 

மதுரை மத்திய சிறைக்குள்  கண்காணிப்பு கேமராவை உடைத்தும், குழாய், தண்ணீர் தொட்டிகளை சேதப்படுத்தியும். விசாரணைக் கைதிகளின் பிளாக் 2 மற்றும் 3-ல் உள்ள கைதிகள், ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டனர். சிறைக்குள் நடந்த கலவரம் என்பதால், சிறை கண்காணிப்பாளரோ, சிறை வார்டனோதான், காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும். ஆனால், சிறை புறக்காவல்நிலைய ஏட்டு பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில்தான் கரிமேடு காவல்நிலையம், அடையாளம் தெரியாத கைதிகள் என 25 பேர் மீது, அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து, சிறை விதிமுறைகளை மீறினார்கள் என்று 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது. சிறைக்கு வெளியே  கேட்டில் இருந்த போலீஸ் ஏட்டுக்கு, சிறைக்குள் நடந்த கலவரம் குறித்து என்ன தெரியும்? அவர் எந்த அடிப்படையில் புகார் கொடுத்தார்?

 

 "The riots in Madurai jail did not happen!"

 

மதுரை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவின் சார்பு நீதிபதி பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர்தான், மதுரை மத்திய சிறைக்குள் இரவிலும் விசாரணை நடத்தினார்கள். சட்ட ரீதியாக உதவுகிறோம் என, யாரோ தந்த ஆலோசனையை அப்படியே ஏற்று, மதுரை மத்திய சிறை தரப்பில் கலவரம் குறித்து புகார் அளிப்பதற்கு யாரும் முன்வரவில்லை. அதே நேரத்தில், மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் சிறைக்கலவரம் குறித்து விளக்கம் அளிப்பதற்கு, சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா செல்ல வேண்டியதாயிற்று. இந்தச் சூழ்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது எப்.ஐ.ஆர்.கூட பதிவாகாமல் இருந்தால் சிறை அதிகாரிகளுக்குச் சிக்கல் வரும் என்பதால்,  ஓ.பி. ஏட்டு பாலசுப்பிரமணியனை புகார் கொடுக்க வைத்து, முதல் தகவல் அறிக்கையை கரிமேடு காவல் நிலையம் பதிவு செய்திருக்கிறது.  ஏனென்றால், சிறை புறக்காவல் நிலையம் நேரடியாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய முடியாது.  

 

 "The riots in Madurai jail did not happen!"

 

மதுரை கரிமேடு காவல்நிலைய ஆய்வாளர் ஜெயச்சந்திரனை தொடர்புகொண்டோம். “சிறையில் கலவரமே நடக்கவில்லை.” என்று ஒரே போடாகப் போட்ட அவர் “ஆமா.. எங்க போலீஸ்காரர்தான் புகார் கொடுத்திருக்கிறார். பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் நான்கூட எப்.ஐ.ஆர். போடலாம். பப்ளிக் புகார் கொடுத்தாலும் எப்.ஐ.ஆர். போடலாம். ஜெயிலில் நடக்கின்ற சம்பவங்களை எங்களுக்குத் தெரிவிப்பதற்காகத்தானே ஏட்டு அங்கே புறக்காவல் பணியில் இருக்கிறார். அன்றைக்கு நடந்த சம்பவத்துக்கு ஜெயிலில் இருந்து பெட்டிஷன் வரல. கைதிகள் பப்ளிக்கை டிஸ்டர்ப் பண்ணுனதுனால, நாங்களே எப்.ஐ.ஆர். போட்டுக்கிட்டோம். சிறைத்துறை எஸ்.பி.,  வார்டனெல்லாம், விசாரணை முடிந்ததற்குப் பிறகு, யார் யாரெல்லாம் அக்யூஸ்ட்ன்னு ஃபிக்ஸ் பண்ணிட்டு, நீதிமன்றம் போயிட்டு, அப்புறம்  விசாரணைக்கு வருவாங்க.  என்னென்ன டேமேஜ்னு ஜெயில் சம்பந்தப்பட்டவங்க ரிப்போர்ட் கொடுப்பாங்க. அதுக்கு தனி எப்.ஐ.ஆர். போடுவோம். அந்த நேரத்துல, இப்ப போட்டிருக்கிற எப்.ஐ.ஆரை திரும்பப் பெறுவோம். அவங்க எப்.ஐ.ஆரை வச்சு வழக்கை நடத்துவோம்.” என்று  ‘தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல’ விளக்கம் தந்தார்.

   

 "The riots in Madurai jail did not happen!"

 

“கலவரம் செய்த கைதிகளுக்குச் சாதகமாக சிறைத்துறை அதிகாரிகள் செயல்படுவதும் சிறைத்துறை அதிகாரிகளைக் காப்பாற்றும் நோக்கத்தில் தமிழக காவல்துறை செயல்படுவதும் கண்கூடாகத் தெரிகிறது. கலவரத்தின் அதிகபட்ச நடவடிக்கை என்பது, ஒழுங்கீனமாக நடந்துகொண்ட கைதிகளை வேறு சிறைக்கு மாற்றுவதாகத்தான் இருக்கும்.” என, சிறைவட்டாரத்தில் நல்லுள்ளம் கொண்டவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.