Skip to main content

அமைச்சர் ஆதரவாளர் வீட்டில் நள்ளிரவை தாண்டியும் நடந்த ரைடு..! அட்டைப் பெட்டியில் பணத்தை அள்ளிச் சென்ற அதிகாரிகள்..!

Published on 27/03/2021 | Edited on 27/03/2021

 

The ride that took place after midnight at the house of the minister's supporter

 

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மேட்டுச்சாலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமார் நடத்தும் மதர்தெரசா கல்வி நிறுவனங்களில் உதயகுமாரின் உதவியாளராகப் பணிபுரிந்துவருபவர் வீரபாண்டியன். இவர், பல வருடமாக காசநோய்ப் பிரிவு முதன்மை ஆய்வாளராகவும் பணி புரிந்துவருகிறார். வீரபாண்டியனின் விராலிமலை வீட்டில் இருந்து பணம் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து கடந்த ஒருவாரமாக கண்காணிப்பில் இருந்த திருச்சி மணடல வருமான வரித்துறை துணை ஆணையர் அனுராதா தலைமையிலான குழுவினர், நேற்று மதியம் வீரபாண்டியனின் வீடுகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள். இந்த தகவல் வெளியான நிலையில் பால்வளத்துறை தலைவர் பழனியாண்டி தலைமையில் அதிமுகவினர் அங்கு குவிந்திருந்தனர். பக்கத்து மாடிகளில் திமுகவினர் நின்று கண்காணித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

 

முதல்கட்ட சோதனை நடந்து கொண்டிருந்தபோதே பணத்தாள்கள் கட்டுப்போடும் ரப்பர்பேன்ட்கள் 2 பாக்கெட் உள்ளே போனது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு 3 பெரிய அட்டைப் பெட்டிகள் (பிஸ்கட் பாக்கெட் வைக்கப்படும் அட்டைப் பெட்டிகள்) கொண்டு சென்றனர். அதன் பிறகு அதிகாரிகள் இரவு உணவை முடித்துக் கொண்டு தொடர்ந்து ஆய்வில் கைப்பற்றப்பட்ட பணம், மற்றும் ஆவணங்களைச் சரிபார்த்து ஒவ்வொன்றாக வீரபாண்டியனிடம் காட்டிவிட்டு அட்டைப் பெட்டியில் அடுக்கி வைத்து சீல் வைத்தனர். தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் மற்றும் சில நபர்களின் பெயர்களுடன் இருந்த பேப்பர்களையும் கைப்பற்றி அவற்றை எல்லாம் தயாராகக் கொண்டு வந்திருந்த மடிக்கணினியில் பதிவுசெய்து பிரிண்ட் எடுத்து வீரபாண்டியனிடம் காட்டி சரிபார்த்தனர். பிறகு கையெழுத்து வாங்கிய பேப்பர்களை ஒரு கட்டைப்பை மற்றும் சூட்கேஸ்களில் வைத்துக் கொண்டு அதிகாலை 2 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டனர்.

 

The ride that took place after midnight at the house of the minister's supporter

 

வெளியே வந்த அதிகாரி அனுராதாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, “நான் மாவட்ட தேர்தல் பார்வையாளர். எது பற்றியும் பேச எனக்கு அனுமதி இல்லை” என்று பதில் கூறிச் சென்றார். விபரம் அறிந்த சிலர் கூறும் போது, ‘அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகள் மட்டுமின்றி திருச்சி, சிவகங்கை மாவட்டத்தி்ல் உள்ள பல தொகுதிகளுக்கும் பணப் பொறுப்பாளர். ஆனால் இவர் தொகுதியில் கடும்போட்டி நிலவுவதால் வெளியில் உள்ள தொகுதிகள் மீது கவனம் செலுத்த முடியவில்லை. இந்த நிலையில்தான், காரைக்குடி தொகுதிக்குப் போக வேண்டிய 'வைட்டமின் ப' போகவில்லை என்று கூட்டணிக் கட்சியினர் தேசியத் தலைமை வரை புகார் கொண்டு போனதால்தான், அமைச்சரை அச்சுறுத்துவதற்கு இந்தச் சோதனை நடத்தப்பட்டது. சரியாகச் செய்ய வேண்டுமானால் பல இடங்களில் சோதனை செய்திருக்க வேண்டும். சில நாட்கள் முன்னால்கூட பல ஆவணங்கள் சிக்கியது. அதுபற்றி கூட எதுவும் விசாரிக்கவில்லை. ஆனால், அந்த பேப்பர்களில் போடப்பட்ட மேப்பில், மையப்பகுதி விராலிமலை வீரபாண்டியனின் வீடு. அங்கிருந்துதான் விராலிமலை ஒன்றியங்களுக்கான பணம் செல்ல வேண்டிய மேப்தான் சிக்கியது. இனிமேல், முதலில் போடப்பட்ட ஒப்பந்தப்படி அனைத்துத் தொகுதிகளுக்கும் பாதுகாப்போடு 'வைட்டமின் ப' அனுப்பி வைக்கப்படும். அதனால் இனி பிரச்சனை இல்லை என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்; முக்கிய தகவலை வெளியிட்ட என்.ஐ.ஏ.!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
new information released about bengaluru hotel incident by nia

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

new information released about bengaluru hotel incident by nia

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்திய நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சி.சி.டி.வி. காட்சி வெளியாகி இருந்தன. மேலும் சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் உணவகத்தில் வெடிகுண்டு வைத்தவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனத் தேசியப் புலனாய்வு முகமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மூன்று மாநிலங்களில் பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) நேற்று (27.03.2024) மூன்று மாநிலங்களில் பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். கர்நாடகாவில் 12, தமிழ்நாட்டில் 5 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் ஒன்று உட்பட மொத்தம் 18 இடங்களில் என்.ஐ.ஏ. குழுக்கள் சோதனை செய்த பின்னர் முஸம்மில் ஷரீப் கைது செய்யப்பட்டு துணை குற்றவாளியாக காவலில் வைக்கப்பட்டார்.

new information released about bengaluru hotel incident by nia

கடந்த மார்ச் 3 ஆம் தேதி இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. முக்கிய குற்றவாளியான முசாவிர் முன்னதாகவே என்.ஐ.ஏ.வால் அடையாளம் காட்டப்பட்டார். குண்டுவெடிப்பை நடத்தியவர் ஷசீப் உசேன். மற்றொரு சதிகாரரான அப்துல் என்பவரையும் என்.ஐ.ஏ. அடையாளம் கண்டுள்ளது. மற்ற வழக்குகளில் என்.ஐ.ஏ. ஏஜென்சியால் தேடப்பட்டவர் மதின் தாஹா. இவர்கள் இரண்டு பேரும் தலைமறைவாக இருக்கிறார்கள். மார்ச் 1 ஆம் தேதி பெங்களூரு புரூக்ஃபீல்டில் உள்ள ஐடிபிஎல் சாலையில் உள்ள கபேயில் ஐ.இ.டி. வெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவருக்கு முஸம்மில் ஷரீப் தளவாட ஆதரவை வழங்கியதாக என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் பல வாடிக்கையாளர்கள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் காயமடைந்தனர். அவர்களில் சிலர் கடுமையாக, வெடிவிபத்தில் சிக்கினர். மேலும் ஹோட்டல் சொத்துக்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

new information released about bengaluru hotel incident by nia

இந்த மூன்று குற்றவாளிகளின் வீடுகளிலும், மற்ற சந்தேக நபர்களின் வீடுகளிலும், கடைகளிலும் இன்று (28.03.2024) சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது பணம் மற்றும் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிக்கவும், குண்டுவெடிப்புக்குப் பின் உள்ள பெரிய சதியைக் கண்டறியவும் முயற்சிகள் நடந்து வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
enforcement department raided the house of former Viralimalai Vijayabaskar MLA

அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து அங்கு கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில்  நடந்து வருகிறது.

அதேபோல விஜயபாஸ்கர் சென்னை, இலுப்பூர் வீடுகள், திருவேங்கைவாசல் கல்குவாரி, கிரசரில் வருமானவரித்துறை அதிரடி சோதனை செய்ததில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பெட்டிகளில் அள்ளிச் சென்றனர். அதற்கான விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த ஆவணங்களின் அடிப்படையில் இன்று காலை முதல் விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் மீதான குட்கா வழக்கும் நிலுவையில் உள்ளதால் அந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.

ர.ர.க்களோ, பாஜக கூட்டணிக்கு அதிமுக போகவில்லை என்பதால் எங்களை பயம் காட்ட இதுபோன்ற சோதனைகளை பாஜக அரசு செய்து வருகிறது. இது பாஜகவின் இயலாமையை காட்டுகிறது என்கின்றனர்.