இன்று முதல் திருத்தப்பட்ட போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராதம் மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. விதி முறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது உடனடி அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை அரும்பாக்கம் அண்ணா நூற்றாண்டு வளைவு அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், போக்குவரத்து விதிகளை மீறிய நபர்களிடம் அபராதம் வசூலித்தனர்.