திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 18,279 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் தமிழக முதல்வர் பழனிசாமி.
அதைத் தொடர்ந்து ரூபாய் 52.59 கோடி மதிப்பில் நிறைவுற்ற, 31 பணிகளைத் தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி, ரூபாய் 19.20 கோடி மதிப்பிலான 11 திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.