Skip to main content

திருவண்ணாமலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் பழனிசாமி!

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

review meeting cm palanisamy in tiruvannamalai collector office

 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 18,279 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் தமிழக முதல்வர் பழனிசாமி. 

 

அதைத் தொடர்ந்து ரூபாய் 52.59 கோடி மதிப்பில் நிறைவுற்ற, 31 பணிகளைத் தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி, ரூபாய் 19.20 கோடி மதிப்பிலான 11 திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

 

review meeting cm palanisamy in tiruvannamalai collector office

 

பின்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புறநகர் ரயில் சேவை - மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

chennai local trains service union railway minister cm palanisamy

 

சென்னையில் புறநகர் ரயில் சேவையைத் தொடங்க அனுமதிக்கக் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

அதில், புறநகர் ரயில் சேவை பொதுமக்களுக்கு மிகவும் உதவியாக இருப்பதோடு, பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் உதவும். புறநகர் ரயில் சேவையைத் தொடங்கக் கோரி செப்டம்பர் 2- ஆம் தேதியே தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. கரோனா தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, ரயில்கள் இயங்க உறுதிச் செய்யப்படும். புறநகர் ரயில் சேவையைத் தொடங்குமாறு, தெற்கு ரயில்வே-க்கு உத்தரவிட கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

 

 

Next Story

"காவிரி- குண்டாறு திட்டம் நிறைவேற்றப்படும்"- முதல்வர் பழனிசாமி பேச்சு!

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

cm palanisamy speech at pudukkottai district

 

கரோனா தடுப்பு பணிகள், மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுக்கோட்டை மாவட்டத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

 

அதன் ஒரு பகுதியாக, விராலிமலையில் ஜல்லிக்கட்டு காளை சிலையைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்திலேயே ஜல்லிக்கட்டு அதிகமாக நடக்கும் மாவட்டம் புதுக்கோட்டை எனப் புகழாரம் சூட்டினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்தாண்டு 110 இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது. புதுக்கோட்டை மக்களின் எதிர்பார்ப்பான காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்" என்றார்.

 

புதுக்கோட்டையில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். பின்பு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறார்.