Is the revenue department just to see the revenue? Do you want to respect agriculture?'-The female farmer shook the governor's office

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற கரடி சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் 'கரடி சித்தூர் கிராமத்தில் உள்ள கோரைக்கால் ஓடையில் விவசாயத்திற்காக ஆக்கிரமிப்பை அகற்ற கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலமைச்சரின் தனி பிரிவிற்கு ஆக்கிரமிப்பு அகற்ற மனு அளித்த நிலையில், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வருவாய் துறையான கோட்டாட்சியர், வட்டாட்சியர் என பல துறைகளில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. டேம் வாய்க்காலை சரி செய்ய பொதுப்பணி துறையினர் காட்டும் முனைப்பு ஓடை வாய்க்காலை சரி செய்ய காட்டாதது ஏன்?. நத்தை போல் செயல்படுகிறார்கள். இவர்களை முயல் வேகத்தில் செயல்பட வைக்க வேண்டு' என மாவட்ட ஆட்சியரிடம் சரமாரியாக குற்றச்சாட்டு வைத்தார். இதனால் ஆட்சியர் அரங்கமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஓடையின் ஆக்கிரமிப்பை எடுத்திருந்தால் பெஞ்சல் புயலுக்குப் பின் சுமார் 30 ஏக்கர் பயிர் செய்திருப்போம். இந்த ஓடையின் ஆக்கிரமிப்பை அகற்றாததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவிர்த்து வருகிறோம். ஆக்கிரமிப்பை அகற்ற ஒவ்வொரு முறையும் அதிகாரிகளுக்கு தகவலளிக்கும் போது உங்களுக்காக மட்டும் வர முடியாது என்று சொல்கிறார்கள். மீண்டும் இதுகுறித்து கேட்டால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்போம் என மிரட்டலும் விடுத்து வருகிறார்கள் என ஆட்சியர் அலுவலகத்தில் சரமரியாக கேள்வி எழுப்பியதால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Is the revenue department just to see the revenue? Do you want to respect agriculture?'-The female farmer shook the governor's office

Advertisment

மேலும் அந்த பெண் விவசாயி, 'இந்த ஆக்கிரமிப்பை எப்போதான் அகற்றுவீர்கள். அகற்றாவிட்டால் சொல்லுங்கள் எங்களுடைய ரேஷன் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அட்டைகளை ஒப்படைத்து விடுகிறோம்.ஒவ்வொரு முறையும் மனு அளித்து பாதிக்கப்பட்டது தான் மிச்சம். எந்த அதிகாரியும் இதுவரை யாரும் பார்க்கவில்லை. நான் டைம் பாஸ்க்காக வரவில்லை. நான் கிராஜுவேட் தான். நான் எக்ஸாம் எழுதி அதிகாரியாக ஆக முடியாதா? விவசாயத்தை ஏன் மதிக்க மாட்டீர்கள். பெண் என்பதால் அலட்சியமாக பார்க்கிறார்கள்' எனவும் ஆவேசமானார்.

தொடர்ந்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்ததால் அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் தவித்தனர். மேலும் வருவாய்துறையை முயல் வேகத்தில் செயல்பட சொல்லுங்கள் எனவும் வருவாய்த்துறை வருவாயை பார்க்கத்தானா என லஞ்சத்தை பற்றி சூசகமாக பெண் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.