Skip to main content

தமிழக மருத்துவ கல்வி இயக்குனராக எட்வின்ஜோ நியமனத்தை எதிர்த்து ரேவதி கயிலைராஜன் வழக்கு

Published on 21/02/2018 | Edited on 21/02/2018
ganthi

 

தமிழக மருத்துவ கல்வி இயக்குனராக  டாக்டர் எட்வின்ஜோ 25.4.2017-ல்  நியமனத்தை எதிர்த்து கரூர் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி கயிலைராஜன் தொடர்ந்த வழக்கை விசாரித்த  மதுரைக்கிளை தனி நீதிபதி, எட்வின்ஜோ நியமனத்தை ரத்து செய்து, உடனடியாக ரேவதி கயிலைராஜனை மருத்துவ கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும் என செப்டம்பர் 20ல் உத்தரவிட்டார்.

 

தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து  தமிழக சுகாதாரத்துறை செயலர் மேல்முறையீடு செய்தார். 


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேணுகோபால், நீதிபதி அப்துல்குத்தூஸ் அமர்வு கடந்த டிசம்பர் 12ல், " மருத்துவக் கல்வி இயக்குனராக எட்வின்ஜோ நியமிக்கப்பட்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை, மருத்துவ கல்வி இயக்குனர் பணி மூப்பு பட்டியல் தொடர்பான அரசாணைகள் ரத்து செய்யப்படுகிறது. ரேவதி கயிலைராஜனை மருத்துவ கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது. ரேவதி கயிலைராஜனை மருத்துவ கல்வி இயக்குனராக நியமனம் செய்வது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை செயலர் 6 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என  உத்தரவிட்டிருந்தனர்.

 

இந்நிலையில், தற்போது, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் நாராயணபாபு மருத்துவ கல்லூரி இயக்குனர் பணிக்கான கூடுதல் பொறுப்புகளை கவனித்து வருகிறார். தமிழக மருத்துவ கல்லூரி இயக்குநர் பணியிடம் காலியாக இருப்பதாக கடந்த 22ல் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்னை இயக்குனராக நியமனம் செய்வது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை செயலர் 6 வாரத்தில் பரிசீலிக்க கோரிய உத்தரவு நடைமுறைப் படுத்தப்படவில்லை. ஆகவே, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என ரேவதி கயிலைராஜன் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

 

இந்த வழக்கு  நீதிபதி சிவஞானம், நீதிபதி ராமதிலகம் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.   அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்ற உத்தரவுப்படி தகுதிப்பட்டியல் தயாரிக்கப்படாமல் மீண்டும் மருத்துவக் கல்வி இயக்குநர் பணியிடம் நிரப்பப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், முறையாக பட்டியல் தயாரிக்கப்பட்டே பணியிடம் பூர்த்தி செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் நீதிமன்ற உத்தரவுப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மருத்துவ கல்வி இயக்குநர் பணியிடத்திற்காக தயார் செய்யப்பட்ட தகுதிப்பட்டியல் தொடர்பான அசல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை (நாளை) பிப்ரவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய விருது வென்ற மூத்த இயக்குநர் காலமானார் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
pasi movie director durai passed away

தமிழ் சினிமாவில் கதாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியவர் துரை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 1979 ம் ஆண்டு வெளியான பசி திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. 

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக வெளிப்படுத்தியதாக பாராட்டை பெற்ற இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. மேலும் இரண்டு மாநில விருது உட்பட சில விருதுகளையும் வென்றது.  இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் துரை. மேலும் ரஜினியை வைத்து ஆயிரம் ஜென்மங்கள், கமலை வைத்து நீயா, சிவாஜியை வைத்து துணை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

கடந்த பல வருடங்களாக சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் துரை (84) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். துரைக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“சமூகம் எது மாதிரி இருக்கிறதோ அது மாதிரியான படங்கள் தான் வரும்” - ஜியோ பேபி

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
joe baby speech at pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் நேற்று இயக்குநர்கள் ஹலிதா ஷமீம், ஜியோ பேபி, தரணி ராஜேந்திரன், பி.எஸ் மித்ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.  

அப்போது, ஜியோ பேபி அவர் இயக்கிய  தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் குறித்து பேசுகையில், “வித்தியாசமான ஜானரில் படமெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் நேரடியாக ஓடிடியில் வெளியான படம். முதலில் இப்படம் எல்லா பிரதான ஓடிடி தளங்களிலும் நிராகரிக்கப்பட்டது. சாட்டிலைட் சேனல்களிலும் நிராகரிக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் நிதி நெருக்கடியில் இருந்தோம். எப்படி வெளிக்கொண்டு வருவதென தெரியவில்லை. யாரும் சப்போர்ட் பண்ணவில்லை. அதன் பிறகு நீ ஸ்ட்ரீம் என்ற புதிய தளம் உதவினார்கள். அதனால்தான் படம் வெளிவந்தது. படம் வந்த பிறகு பெரும்பாலும் பெண்களால்தான் இப்படம் பேசுபொருளானது. சமூக வலைத்தளங்களிலும் விவாதத்தை உருவாக்கியது.  அதன் பிறகு நிராகரிக்கப்பட்டவர்களிடமிருந்து அழைப்புகள் வந்தது. இந்தப் படத்தை நிராகரித்த அனைவர்களும் ஆண்கள் தான். 

joe baby speech at pk rosy film festival

தொடர்ந்து பெண்ணியம் சம்மந்தபட்ட படங்கள்தான் எடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்ட வேண்டும் அவ்வுளவுதான். அதில் பெண்ணியவாதம் மாதிரியான படங்களும் இருக்கும். சமூகம் எது மாதிரி இருக்கிறதோ அது மாதிரியான படங்கள்தான் வரும். அதை நான் பண்ணவில்லையென்றாலும் வேறு யாராவது பண்ணுவார்கள்” என்றார்.