Skip to main content

ஓட்டுக்கு கொடுத்த பணத்தை திரும்ப கொடுங்க!- மக்களை மிரட்டும் ஒபிஎஸ் ஆதரவாளர்கள்

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

தேர்தல் முடிந்தும் கூட இன்னும் தேனி மாவட்டத்தில் தேர்தல் பரபரப்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது. பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரும், காங்கிரஸ்சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்க தமிழ்செல்வன் உள்பட சில கட்சிகளும் சுயேட்சைகளும் போட்டி போட்டனர்.

 

 

ops theni

 

இருந்தாலும் அதிமுக, காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையேதான் தேர்தல் களம் சூடு பிடித்து வந்தது. இந்த நிலையில்தான் தேர்தல் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் தரப்பினர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காள மக்களை பணத்தால் அடித்து ஓட்டு வாங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாக்காளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் அந்தந்த பகுதியில் உள்ள மாவட்டம் நகரம் ஒன்றியம் கிளைப்  பொறுப்பாளர்கள் மூலமாக பணப்பட்டுவாடா பகிரங்கமாகவே நடந்தது.

 

அதை தேர்தல் அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை இந்தநிலையில்தான் கடந்த 18ஆம் தேதி தேர்தலும் வழக்கம் போல் நடந்தது. ஆனால் ஓபிஎஸ் தரப்பு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தும்கூட எதிர்பார்த்த அளவு வாக்காளர்கள் ஓபிஎஸ் மகனுக்கு சரிவர ஓட்டு போடவில்லை அதுலையும் 75% தான் வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. அதன் மூலம் பணம் வாங்கியவர்கள் சரிவர ஓட்டு போட வில்லை அதனால் தோல்வியை சந்தித்து விடுவோமா என்ற எண்ணம் ஓபிஎஸ்க்கும்,அவரது மகன் ரவீந்திரநாத்குமார் காதுக்கு எட்டியதின் பேரில் டென்ஷனாகி விட்டனராம்.

 

 அதிலேயும் உசிலம்பட்டி தொகுதியில் பெரும்பான்மையான ஓட்டுக்கள் பரிசு பெட்டிக்கு  தான் விழுந்திருக்கிறது என்ற தகவலும் ஓபிஎஸ்-க்கு போயிருக்கிறது.

 

அதன் அடிப்படையில் தான் அந்தந்த பகுதியில் உள்ள கட்சி பொறுப்பாளர்களைத் தூண்டிவிட்டு ஓட்டுக்கு பணம் வாங்கிய வாக்காள மக்களை ஆய்வு செய்ய வலியுறுத்தி இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் உசிலம்பட்டி இரண்டாவது வார்டில் உள்ள பாக்கியத்திடம் பொறுப்பில் உள்ள ர.ர.க்கள் சிலர் சென்று பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போடவில்லை என்று சத்தம் போட்டு இருக்கிறார்கள். அதை கண்டு டென்ஷன் அடைந்த பாக்கியமோ நான் ஒன்னும் ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என் வீட்டுக்காரர் இடம் அடைக்கலம் ஓட்டுக்கு ஆயிரம் வீதம் கொடுத்தார். ஆனால் நாங்கள் ஓட்டு போட்டு விட்டோம் அப்படி இருந்தும் இரட்டை இலைக்கு ஓட்டு போடவில்லை என்று என்னிடம் கட்சிக்காரர்கள் சத்தம் போட்டார்கள் அதனால் பணத்தையும் திருப்பி கொடுத்து விட்டோம். 

 

ops theni

 

இப்படி தேவையில்லாமல் என் குடும்பத்தை அசிங்கப்படுத்தி விட்டனர் என்று பகிரங்கமாகவே ஓபிஎஸ்  தரப்பு மேல் குற்றம் சாட்டினார். அதேபோல் ஒபிஎஸ் தொகுதியின போடி தொகுதியில் உள்ள 28, 29 வார்டுகளில் பெரும்பாலான மக்கள் ஓட்டுப் போட போகவில்லை  என்று கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொறுப்பில் உள்ள ர.ர.க்கள் வீடு வீடாகச் சென்று தங்களிடம் உள்ள ஓட்டு சாப்தாவை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் பணத்தை வாங்கிக்கொண்டு ஏன் ஓட்டு போட வரவில்லை அதனால் ஓட்டுக்கு வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுங்கள் என வெளிப்படை

யாகவே அந்த மக்களிடம் கேட்டு வாங்கி வருகிறார்கள்.

 

இதனால் பொதுமக்கள் ஓபிஎஸ் மேல் பெரும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். அதுபோல் ஓபிஎஸ்சின் சொந்த ஊரான பெரியகுளத்திலும் பொறுப்பில் உள்ள ர.ர.க்கள் சிலர் வார்டு வாரியாக  ஓட்டு  சாப்தாவை கையில் வைத்துக்கொண்டு ஓட்டுப்போட வராத மக்களை மிரட்டி கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு வருகிறார்கள். இப்படி கம்பம் ஆண்டிபட்டி, தேனி, கூடலூர் உள்பட தொகுதி முழுக்கவே ஓபிஎஸ் ஆதரவாளர்கள்  ஓட்டு சாப்தாவுடன் களமிறங்கி ஓட்டுக்கு கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று பொது மக்களை மிரட்டி  வாங்கி வருகிறார்கள். இதனால் தொகுதி முழுக்கவே ஓபிஎஸ் மேல் பெரும் அதிருப்தி அலையும் வீசி வருகிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.