Skip to main content

மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு வயது வரம்பு உயர்வு..!

Published on 05/05/2021 | Edited on 05/05/2021

 

Retirement age limit for electricity employees has been increased

 

மின்வாரியத்தில் பணிபுரிவோருக்கான ஓய்வுபெறும் வயது 59இல் இருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. இதுகுறித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது, “அரசாணையின் அடிப்படையில் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை 58இல் இருந்து 59 ஆக உயர்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 59இல் இருந்து 60 வயதாக உயர்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

மேலும், இந்த உத்தரவு அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், சட்ட மற்றும் அரசியலமைப்பு அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பொருந்தும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம் இதை கவனமாக பரிசீலித்த பின்னர், அரசாங்கத்தின் இந்த உத்தரவை ஏற்க முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழக மின்வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஓய்வு வயது 59இல் இருந்து 60 ஆக உயர்த்த வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. பணியில் உள்ள அனைவருக்கும் மற்றும் 31.5.2021 முதல் ஓய்வு பெறுவோருக்கும் இது பொருந்தும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி’ - முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
'Good news for govt employees' - CM M.K.Stalin action announcement

தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “மக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் பல முன்னோடித்திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வகையில் நடைமுறைப்படுத்துவதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையே அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதன்படி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கனிவுடன் பரிசீலித்து, 01.07.2023 முதல் மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கிட அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வகையில் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 01.01.2024 முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு பணியாளர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக 01.01.2024 முதல் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

வேலை நிறுத்தம்; வருவாய்த்துறை அலுவலகத்தில் தேங்கிய பணிகள்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Office work has also been completely disrupted due to struggle by revenue dept officials.
கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையின் அலுவலர்கள் மொத்தம் 14 ஆயிரம் பேர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.  முதல்கட்டமாக கடந்த பிப்.13ம் தேதி ஒட்டுமொத்த ஊழியர்களும் தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இரண்டாம் கட்ட போராட்டமாக அனைத்து பணிகளையும் புறக்கணித்து அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய ஊழியர்கள் நேற்று(26.2.2024) வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்றாம் கட்ட போராட்டமாக இன்று (27.2.2024) முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் மொத்தம் 400 ஊழியர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் வாயிலாக பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை உடனே வெளியிட வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும். முதுநிலை நிர்யணம் செய்வதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்திட மனிதவள மேலாண்மைத்துறை மூலமாக தெளிவுரை வழங்கிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதி திருத்த ஆணையினை உடனே வெளியிட வேண்டும். பேரிடர் மேலாண்மைப்பிரிவில் 31.03.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

இன்று முதல் தொடங்கிய காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக பிறப்பு, இறப்பு, வாரிசு, விதவை உள்ளிட்ட அனைத்து வகையான சான்றுகள் வழங்கும் பணிகளும், தேர்தல் மற்றும் அலுவலகப் பணிகளும் முற்றிலும் தடைபட்டுள்ளது.