Advertisment

‘ஓய்வுபெற்ற  ஐ.ஜி. முருகனுக்கு பிடிவாரண்ட்’ - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Retired IG Murugan  warrant court order

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. முருகனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் இணை இயக்குநராக பணியாற்றிவர் போலீஸ் ஐ.ஜி. முருகன். இவர் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் எஸ்.பி. ஒருவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சம்பந்தப்பட்ட பெண் எஸ்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் சி.பி.சி.ஐ.டி.க்கு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை பெருநகர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு இன்று (22.11.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி முருகன் ஆஜராகவில்லை. இதனையடுத்து முன்னாள் ஐ.ஜி. முருகனுக்கு நீதிபதி சுல்தான் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

court saidapet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe