Skip to main content

35 ஆண்டுகள் சட்டத்திற்குட்பட்டு பணியாற்றினேன்... இன்று மனநிறைவுடன் விடைபெறுகிறேன்... -ஓய்வுபெற்ற டிஜிபி. டிகே.ராஜேந்திரன்

Published on 30/06/2019 | Edited on 30/06/2019

 

பணி ஓய்வுபெறும் டிஜிபி ராஜேந்திரன் இன்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசுகையில்,

பெருமைமிக்க காவல்துறையில் சுமார் 35 ஆண்டுகள் பணிபுரிந்து என்று காவல்துறையின் தலைமை இயக்குனராக பணி நிறைவு பெறும் வேளையில் முதற்கட்டமாக கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் என்னை காவல்துறையின் தலைமை இயக்குனராக பணியாற்றிய தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை நினைவுகூற விரும்புகிறேன். அதனைத் தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் என்னை காவல்துறையின் தலைமை இயக்குனராகவும், காவல்துறை தலைமை அதிகாரியாகவும் நியமித்த தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Retired DGP. TK rajendiran  speech


எனது ஒட்டுமொத்த 35 ஆண்டுகால பணிக்காலத்தை சட்டத்துக்கு உட்பட்டும் மனசாட்சிக்கு உட்பட்டு தமிழக அரசின் மனிதநேய கொள்கைகளை கருத்தில் கொண்டு முறையாகவும் சரியாகவும் செய்து முடித்திருக்கிறேன். இன்று உங்கள் அனைவரின் முன்பாக முழு மனநிறைவுடன் அமைதியோடும், மகிழ்ச்சியோடும் நன்றி உரையாற்றுகிறேன். இவ்வாறான சிறப்பான பணியை செயல்படுத்துவதற்கு ஒவ்வோர் ஆண் மற்றும் பெண் காவலர்கள் மற்றும் சக அதிகாரிகள் என்னோடு தோளோடு தோள் நின்று செயலாற்றி உள்ளீர்கள். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் காரணமாக தமிழக அரசு காவல்துறை கட்டளைகளை நம்மால் சரிவர செயல்படுத்த முடிந்துள்ளது. இந்த பணிகளை என்னோடு இணைந்து முழுமனதுடன் செயல்படுத்திய பலவிதமான சிறப்பான செயல்பாடுகளுக்கு வித்திட்ட, வழியமைத்து முடித்துக் கொடுத்த உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த நேரத்தில் சிரம் தாழ்த்தி என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த மூன்றாண்டு காலத்தில் தமிழக காவல்துறை பல சோதனைகளையும், சவால்களையும் சந்தித்துள்ளது. குறிப்பாக சொல்வதென்றால் டிசம்பர் 5, 2014 மக்களுக்கு தாங்கொண்ணா துயரத்தை தந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எதிர்பாராத மறைவும், 2017 தமிழகம் தழுவி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டங்கள் மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் போது தமிழக காவல்துறை மேற்கொண்ட பாதுகாப்பு மற்றும் துயர் துடைக்கும் மறுவாழ்வு பணிகள். அவ்வப்போது நடந்த இடைத் தேர்தலுக்கான காவல் பணிகள், நடந்து முடிந்த நாடாளுமன்றத்  பொதுத்தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகள் இதுபோன்று கடந்த மூன்று ஆண்டுகளில் பல விதமான சவால்களை சோதனைகளை தமிழக காவல்துறை சந்தித்துள்ளது எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்"- காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு சுற்றறிக்கை!

Published on 19/02/2022 | Edited on 19/02/2022

 

"Patrols should be intensified" - Director General of Police Silenthra Babu Circular!

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். 

 

அந்த சுற்றறிக்கையில், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று (19/02/2022) மாலை 06.00 மணியுடன் அமைதியாக நடந்து முடிந்தது. பல இடங்களில் சிறு பிரச்சனைகள் எழுந்த போது, அந்த இடங்களுக்கு விரைந்து சென்று உடனடி நடவடிக்கை எடுத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சரக காவல்துறை துணைத் தலைவர்கள், மண்டல காவல்துறைத் தலைவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

தேர்தல் பணி இன்னும் முடியவில்லை. சில பிரச்சனைகள் இனிமேல் தோன்ற வாய்ப்பு உண்டு. எனவே. ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். பிரச்சனையான பகுதிகள் கண்காணிக்கப்படுதல் வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு பெட்டிகள் வாக்கு எண்ணுமிடத்தில் ஒப்படைத்த பின்னர் தலைமை அலுவலகங்களுக்கு அறிக்கை அனுப்புதல் வேண்டும். 

 

தீவிர கண்காணிப்புப் பணிகள் மாநகரங்களிலும், மாவட்டங்களிலும் அடுத்த மூன்று நாள்களுக்கும் தொடரும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Next Story

முதல்வருடன் டிஜிபி, காவல் ஆணையர் சந்திப்பு!

Published on 16/02/2020 | Edited on 16/02/2020

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு  எதிரான போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. 
 

இந்த தடியடி சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற கோரியும், சட்டப்பேரவையில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்ற கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடஙகளில் இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

cm palanisamy dgp tripathy and chennai police commissioner akviswanathan meet

இந்த நிலையில் சென்னையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை செய்து வருகின்றனர். இதில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம், சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவை பற்றி ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வருடன் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். 
 

இதனிடையே தமிழகத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்க்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆறு ஐபிஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.