Skip to main content

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

2019-ம் ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. 

 

exam result

 

தேர்வு எழுதிய மாணவர்கள் அவர்களின் தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in http:/www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in http:/www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, http:/www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம். அதுமட்டுமின்றி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் வழியாக பதிவு செய்த கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

அதேபோல், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது பதிவு செய்த கைபேசி எண்ணிற்கு முடிவுகள் அனுப்பப்படும். ஏப்ரல் 20-ம் தேதி முதல் 26-ம் தேதிவரை அவர்கள் பயின்ற பள்ளிகளில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

24-ம் தேதி முதல் 26-ம் தேதிவரை www.dge.tn.nic.in http:/www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் அவர்களாகவும் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
 

பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரு மாதத்திற்குள் எஸ்.ஐ. தேர்வு முடிவுகள்!

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

Within a month S.I. Exam results

 

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட தாலுகா காவல், சிறப்பு காவல்படை, ஆயுதப்படை எஸ்.ஐ பணிகளுக்கு நடந்து முடிந்த எழுத்துத் தேர்வின் முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக, காவல் துறை சார்பு ஆய்வாளர்கள் மற்றும் நிலைய அதிகாரிகள், தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறைக்கான  ஒருங்கிணைந்த தேர்வு 2023 க்கான அறிவிக்கை கடந்த மே மாதம் 5 ஆம் தேதி மற்றும் மே 23 ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் வெளியிடப்பட்டது.

 

இதில் சார்பு ஆய்வாளர் தாலுகா, ஆயுதப்படை, சிறப்புக் காவல்படை ஆகிய பணிகளுக்கு 621 மற்றும் நிலைய அதிகாரிகளுக்கு 129 உட்பட மொத்தம் 750 (ஆண்கள் - 559, பெண்கள் - 191) காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு மொத்தம் 1 லட்சத்து 86 ஆயிரத்து 722 பேர் (ஆண்கள்- 1 லட்சத்து 45 ஆயிரத்து 804 பேரும்,  பெண்கள் - 40 ஆயிரத்து 885 மற்றும் திருநங்கைகள் - 33பேரும்) விண்ணப்பித்திருந்தனர்.

 

இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி பொது விண்ணப்பதாரர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதித் தேர்வு 33 மாவட்ட மாநகர மையங்களில் நடைபெற்றது. அதே போன்று கடந்த 27 ஆம் தேதி காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை விண்ணப்பதாரர்களுக்கான துறை தேர்வு 12 மையங்களில் நடைபெற்றது. சுமார் 80 சதவீத விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வுகளில் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வு முடிவுகள் சுமார் ஒரு மாத காலத்திற்குள் வெளியிடப்படவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்ட தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

 

Next Story

விபத்தில் சிக்கிய மாணவன்; கண்கலங்கிய அமைச்சர்; கேரளாவில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

kerala sslc result minster sivankutty emotional speech about student saarang incident 

 

கேரள மாநிலம் கரவாம் வஞ்சியூர் என்ற பகுதியைச் சேர்ந்த பினீஷ் குமார் - ரஜினி ஆகியோரின் மகன் சாரங்க். இவர் திருவனந்தபுரம் ஆற்றிங்கல் ஆண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இது மட்டுமின்றி கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட சாரங்க், கேரளா பிளாஸ்டர்ஸ் என்ற கால்பந்து அணி சார்பில் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வந்துள்ளார். இந்த வருடம் தனது 10ம் வகுப்பு பொது தேர்வை எழுதிவிட்டு முடிவுக்காக காத்து இருந்தார்.

 

இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி அவரது தாயுடன் ஆட்டோவில் பயணித்த போது திருவனந்தபுரம் அருகே சாலை விபத்தில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த சாரங்க் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி காலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சாரங்கின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் சம்மதித்தனர். இதையடுத்து சாரங்கின் உறுப்புகளான கண்கள் மற்றும் கல்லீரல் போன்ற உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டன. இவரிடம் இருந்து பெறப்பட்ட இதயமானது கோட்டயத்தை சேர்ந்த ஒரு குழந்தைக்கு வழங்கப்பட்டது. இது போன்று மற்ற 5 பேருக்கு மறுவாழ்வு அளித்த செயல் மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் சாரங்கின் உடல் அவர் படித்த பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. சாரங்கின் உடலிற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நேற்று  10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் சாரங்க் அனைத்து பாடத்திலும் ஏ பிளஸ் கிரேடு எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தார். இருப்பினும் தேர்வு முடிவுகள் வெளி வருவதற்கு முன்னதாகவே மாணவர் சாரங்க் உயிரிழந்த சம்பவம் கேரள மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

kerala sslc result minster sivankutty emotional speech about student saarang incident 

 

இந்நிலையில் நேற்று 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவை கேரள மாநில கல்வி அமைச்சர் சிவன் குட்டி வெளியிட்டார். அப்போது அவர் சாலை விபத்தில் உயிரிழந்த மாணவன் சாரங்க் பற்றி பேசும் போது, "மாணவன் சாரங்க் அனைத்து படங்களிலும் ஏ பிளஸ் கிரேட் பெற்று முதல் நிலையில் தேர்ச்சி பெற்றுள்ளார். விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த மாணவனின் பெற்றோர் அந்த துக்கமான சமயத்திலும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்ததை கண்டு நெகிழ்ந்து போனேன். பெற்றோரின் துயரில் நானும் பங்கு கொள்கிறேன்" எனப் பேசிக்கொண்டு இருக்கும் போதே கண்கலங்கிய சம்பவம் அங்கு இருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.