Skip to main content

தடைக்காலம் முடிந்தது: ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி!

Published on 30/09/2018 | Edited on 30/09/2018

 

ohenakkal

 

ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க கடந்த 83 நாள்களாக தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று முதல் தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டு உள்ளது.


கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர் படிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் கிருஷ்ணராஜசாகர், ஹேரங்கி, கபினி ஆகிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. 

 


இந்த அணைகளில் இருந்து உபரிநீர் கடந்த ஜூலை மாதம் முதல் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒகேனக்கல்லுக்கு, ஜூலை 9ம் தேதியன்று வினாடிக்கு 5600 கன அடியாக இருந்த நீர் வரத்து, அடுத்த நாளே 30 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. 

 


இதனால் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அதிரடியாக தடை விதித்தது. நீர்வரத்து குறைந்து, மறு உத்தரவு வரும் வரையிலும் இந்த உத்தரவு நீடிக்கும் என்றும் அப்போது கூறப்பட்டு இருந்தது.

 


கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி வினாடிக்கு 2.10 லட்சம் கன அடியாக நீர் வரத்து அதிகரித்ததால், அருவி பகுதிகளில் உள்ள தடுப்பு கம்பிகள் உடைந்தன. நீர்வரத்து குறைந்தபிறகு தடுப்பு கம்பிகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வந்ததால், அருகளில் குளிக்க அப்போதும் தடை நீட்டிக்கப்பட்டு வந்தது.


தடுப்பு கம்பிகள் சீரமைக்கும் பணிகள் கடந்த 23ம் தேதி முடிவடைந்தன. கடந்த 24ம் தேதியன்று ஒகேனக்கல் காவிரி ஆறுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் வரத்து இருந்த நிலையில், மறுநாள் 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படாமல் இருந்தது.

 


இந்நிலையில், கடந்த 28ம் தேதி நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், நேற்று 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது. 


பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் அக். 2ம் காந்தி ஜெயந்தி விடுமுறை என விடுமுறைக்காலமாக இருப்பதையொட்டி, சுற்றுலா பயணிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க நேற்றுமுதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 83 நாள்களாக தொடர்ச்சியாக அருவிகளில் குளிக்க தடை உத்தரவு அமலில் இருந்த நிலையில், தற்போது தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம் வந்தடைந்த காவிரி நீர்; பிலிகுண்டுலுவிற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

Cauvery water to reach Tamil Nadu; Flood warning for Pilikundulu

 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாகக் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாகக் குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகக் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாகக் கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும் கபினி அணையிலிருந்தும் நீர் திறக்கப்பட்டுள்ளது.

 

தற்போது கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கபினி அணையிலிருந்து 15,000 கன அடி திறக்கப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 2,688 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திறந்து விடப்பட்ட நீரானது ஒகேனக்கல் வந்தடைந்துள்ளது. தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுலுவில் இன்று காலை 2,000 கன அடியாக இருந்த நீர் வரத்து தற்பொழுது 5,000 கன அடியாக உயர்ந்துள்ளது. ஓகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5,000 கன அடியாக உள்ளது. காவிரி நீர் தமிழக எல்லையைக் கடந்துள்ளதால் பிலிகுண்டுலுவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

 

Next Story

இராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

Published on 19/07/2023 | Edited on 19/07/2023

 

Ramanathapuram fishermen banned from going to sea

 

இராமநாதபுரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இராமநாதபுரம் மாவட்டத்தில் சூறைக்காற்று வீசி வருவதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளர்ப்புத்துறை அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை விசைப்படகு மீனவர்கள், நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் சுமார் 2 ஆயிரம் விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரம் நாட்டுப்படகுகள்  கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மீன்பிடிக்க அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதால் நாள் ஒன்றுக்கு சுமார் 10 கோடி வரை இழப்பு ஏற்படும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.