சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனிஸ்வர் நாத் பண்டாரி வரும் நவம்பர் 22- ஆம் தேதி பதவியேற்கிறார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள புதிய அரங்கில் நடைபெற உள்ள விழாவில், காலை 11.30 மணிக்கு பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக் கொள்கிறார்.
இவ்விழாவில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் தலைவர், மூத்த நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட கலந்துகொள்கின்றனர்.