Skip to main content

ரிசார்ட்டில் எஸ்.எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

Published on 14/08/2022 | Edited on 14/08/2022

 

resorts ssi police incident police investigation

கடந்த ஆகஸ்ட் 11- ஆம் தேதியன்று தென்காசி மாவட்டத்தின் குற்றாலம் பகுதி பழைய குற்றாலத்திலிருக்கும் ரிசார்ட் ஒன்றில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியும், அவரின் பாதுகாப்பு அதிகாரியான திருத்தணியைச் சேர்ந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டரான பார்த்திபன் மற்றும் மேத்யூ (வயது 60) ஆகியோர் தங்கியுள்ளனர். நீதிபதி வேறு ஒரு அறையில் தங்க, அங்குள்ள கெஸ்ட் ஹவுசில் எஸ்.எஸ்.ஐ. பார்த்திபனும் மேத்யூவும் தங்கியிருக்கின்றனர். பார்த்திபன் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர்.

 

நேற்று முன்தினம் (12/08/2022) இரவு எஸ்.எஸ்.ஐ. பார்த்திபனும், மேத்யூவும் பேசிக் கொண்டிருந்துவிட்டு பின்பு தூங்கச் சென்றனர். காலையில் மேத்யூ எழுந்தபோது பார்த்திபனைக் காணவில்லை. அந்தப் பகுதி வளாகத்தில் தேடிய மேத்யூ, பின்னர் அறையிலுள்ள பாத்ரூம் கதவைத் திறக்க முயன்றார். அது திறக்கவில்லை. சந்தேகப்பட்ட மேத்யூ பலமாகக் கதவைத் திறந்தபோது அங்கு கைத்துப்பாக்கியுடன் ரத்த வெள்ளத்தில் பார்த்திபன் இறந்து கிடந்தது கண்டு பதறியவர், விடுதி பொறுப்பாளர் மற்றும் போலீசாருக்கும் தகவல் கொடுத்திருக்கிறார்.

 

குற்றாலம் இன்ஸ்பெக்டர் ஜோசப் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். எஸ்.எஸ்.ஐ. பார்த்திபன் கைத்துப்பாக்கியால் இடது மார்பில் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்ததுடன் சத்தம் வெளியே கேட்காமலிருப்பதற்காக கதவைப் பூட்டிக் கொண்டிதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

 

பின்னர் எஸ்.எஸ்.ஐ. பார்த்திபனின் உடலைப் பிரதேப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த எஸ்.பி.கிருஷ்ணராஜ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

 

முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்சினை காரணமாக எஸ்.எஸ்.ஐ. பார்த்திபன் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் எஸ்.பி.கிருஷ்ணராஜ்.

 

தற்கொலை செய்துகொண்ட எஸ்.எஸ்.ஐ. பார்த்திபனுக்கு தீபா (வயது 45) என்ற மனைவியும் யுவராஜ் (வயது 17) என்ற மகன் ஹெசிக்கா (வயது 12) என்ற மகளும் உள்ளனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.