Skip to main content

காதலுக்கு எதிர்ப்பு; ஒரே கிணற்றில் விழுந்து சகோதரிகள் தற்கொலை

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

 Resistance to love; Sisters committed suicide by falling into the same well

 

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அக்கா, தங்கை என சகோதரிகள் இருவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் மாவட்டம் அயன் புதுப்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

திருச்சி மாவட்டம் அயன் புதுப்பட்டியை சேர்ந்தவர் பிச்சை. இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு வித்யா (21), காயத்ரி (20) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தங்கி அங்குள்ள ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் சொந்த ஊரான அயன் புதுப்பட்டியில் நடைபெற்ற திருவிழாவிற்காக வந்திருந்த இருவரும் செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தனர். இதனால் சந்தேகமடைந்த தாய் அகிலாண்டேஸ்வரி இரண்டு பேரிடமும் விசாரித்துள்ளார்.

 

அப்பொழுது வித்யா காங்கேயத்தைச் சேர்ந்த நபரை காதலித்து வந்தது தெரியவந்தது. அதேபோல் காயத்ரியும் வேறொரு நபரை காதலித்து வந்ததாக தாயிடம் தெரிவித்துள்ளார். இதற்கு வீட்டிலிருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்ற வித்யா, காயத்ரி ஆகிய இரண்டு பேரும் விவசாயக் கிணறு ஒன்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டனர்.

 

இருவரின் செல்போனும் கரைப்பகுதியில் கிடந்ததை கண்ட மாடு மேய்த்தவர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபொழுது 2 உடல்கள் நீரில் மிதந்தபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வளநாடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர், வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு பேரின் உடல்களையும் மீட்டனர். சகோதரிகள் இருவர் காதல் எதிர்ப்பால் ஒரே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.