Skip to main content

இறந்தவரின் உடலை புதைக்க எதிர்ப்பு...வேலூரில் மீண்டும் ஒரு சாதிய பிரச்சனை.

Published on 05/09/2019 | Edited on 05/09/2019

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மதனஞ்சேரியை சேர்ந்தவர் 70 வயதை கடந்த மூதாட்டி கங்கம்மாள். இவர் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர். இவர் செப்டம்பர் 4ந்தேதி இறந்துள்ளார். இவரை அந்த கிராமத்துக்கு உட்பட்ட சுடுக்காட்டில் அடக்கம் செய்ய முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளில், அவரது குடும்பத்தார் இறங்கியுள்ளனர்.


மற்றொரு சாதியினரின் உடல் எங்கள் சமூக சுடுக்காட்டில் அடக்கம் செய்யக்கூடாது என அக்கிராமத்தில் உள்ள சிறுபான்மையின சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். இதனால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இறந்தவரின் மகன் சி.பி.எம் கட்சியின் வாணியம்பாடி தாலுக்கா குழு உறுப்பினராக உள்ளார். இதனால் கங்கம்மாள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


அதன்அடிப்படையில் அந்த கிராமத்துக்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், சுடுகாட்டை விட மறுப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் நாங்கள் விட முடியாது எனச்சொன்னதாக தெரிகிறது. மயானம் என்பது பொதுவானாது. இங்கு இன்னார் தான் அடக்கம் செய்ய வேண்டும் என சட்டத்தில் கிடையாது. அதனால் அமைதியாக இருங்கள், அடக்கம் நடைபெறும். நீங்கள் எதிர்த்தால் கைது செய்யப்படுவீர்கள், தீண்டாமை வழக்கு போடப்படும் எனச்சொன்னதாக தெரிகிறது.

Resistance to bury the body of the deceased again a caste problem in Vellore

எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் வெகு சிலர் தான். அவர்கள் தான் சாதி பிரச்சனையை உருவாக்கியுள்ளார்கள். அதற்கு காரணம் சுடுகாட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலம் வைத்திருப்பவர்கள், சுடுகாட்டையும் ஆக்கிரமித்துள்ளதாக தெரிகிறது. அந்த ஆக்கிரமிப்பு நில ஆசையில் தான் தூண்டிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


கங்கம்மாள் உடலை  அடக்கம் செய்ய சுடுகாட்டில் குழிவெட்டும் பணியில் அதற்கானவர்கள் ஈடுப்பட்டுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அதிகாரிகள் அங்கு உள்ளதால் அந்த கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது.


ஏற்கனவே சுடுகாட்டுக்கு வழிவிடவில்லை எனச்சொல்லி பாலத்தில் இருந்து உடலை இறக்கிய விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறது மாவட்ட நிர்வாகம். அடுத்து இன்னொரு பிரச்சனையா என அதிர்ச்சியான கலெக்டர் சண்முகசுந்தரம், உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட, தடுப்பவர்களை பணிய வைத்துள்ளது என்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.