Skip to main content

கடலில் பாலம் அமைக்க எதிர்ப்பு;நூற்றுக்கணக்கான படகில் மீனவர்கள் கடல் முற்றுகைப் போராட்டம்!!

Published on 18/09/2018 | Edited on 18/09/2018

 

 

800 மெகாவாட் கொண்ட 2 அலகுகளுடன் கூடிய உடன்குடி அனல் மின் நிலையம், தூத்துக்குடி மாவட்டமான உடன்குடியில் அமைய விருக்கிறது. 2009ல் மத்திய அரசின் அமைச்சர் ஜெயராம் ரமேஷால் அடிக்கல் நாட்டப்பட்டு பின் அத்திட்டம் கிடப்பில் வைக்கப்பட்ட நேரத்தில், அதனை தமிழக அரசே செயல்படுத்தும் என்று அறிவித்தவர் ஜெயலலிதா.

 

அதன் பின் டெண்டர் பணிகளால் தாமதமான, அத்திட்டம் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி 7259 கோடியில் அமைக்கப்படும் என அறிவித்து வீடியோ கான்ஃபரன்சிங்கு மூலம் அடிக்கல் நாட்டினர்.

 

உடன்குடியில் அமையவிருக்கும் அந்த அனல் மின் நிலையத்திற்குத் தேவையான மூலப்பொருள் நிலக்கரியை கடல் வழியாகக் கொண்டு வந்து குலசேகரப்பட்டணம் அருகில் உள்ள கல்லாமொழிக் கடற்கரையின் மூலம் இறக்குமதி செய்து அனல் மின் நிலையம் கொண்டு வருவதற்காக கல்லாமொழி கடலில் உள்ளே சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவு பாலம் அமைத்து கொண்டு வரப்படும் நிலக்கரியை கொண்டு செல்ல அங்கு நிலக்கரி இறங்கு தளம் அமைக்கப்படுகிறது. பின்பு நிலக்கரியை அங்கிருந்து அனல் மின் நிலையத்திற்கு கன்வேயர் பெல்ட் மூலம் கொண்டு செல்லப்படும்.

 

இந்தக் கடல் பாலம் அமைக்கப்படுவதால் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வது தடைபடும், மேலும் 9 கிலோ மீட்டர் தொலைவு பாலம் அமைப்பது கடல் வாழ் மீன் இனங்களை இடம் பெறச் செய்து விடும். கடலின் மாசு கெடுவதோடு ஆயிரக்கணக்கான சுற்றுப் பகுதி ஆலந்தலை அமலி நகர் மணப்பாடு குலசேகரன்பட்டினம், கல்லாமொழி உள்ளிட்ட மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்ப்டும் என மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

ஆனால் பணிகள் தீவிரமாக நடப்பதை அறிந்த சுற்று வட்டார 20 கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் கருப்புக் கொடி கட்டியவாறு கடல் வழியாக நிலக்கரி இறங்கு தளத்தை முற்றுகையிட்டனர். இதில் பெரியதாழை வரையிலான கடற்கரை மக்களின் படகுகளும் வரிசை கட்டியிருத்தன. அரசுக் கெதிரான கோஷங்களோடு மீனவர்களை வாழ விடு உள்ளிட்ட கோஷங்களையும் எழுப்பினர்.

 

மீனவ மக்களின் போராட்டம், காரணமாக நெல்லை சரக டி.ஐ.ஜி.கபில்குமார் சராட்கர் தலைமையில் தூத்துக்குடி எஸ்.பி.முரளிரம்பா கண்காணிப்பில் போலீசார் குவிக்கப்பட்டனர். சாலைகளில் செக் கோஸ்ட் அமைக்கப்பட்டு வாகனங்கள் தடுக்கப்பட்டன பத்திரிகையாளர்களைக் கூட உள்ளே அனுமதிக்காமல் தடையும் போடப்பட்டது.

 

அனல் மின் நிலையம் கூடாது என்று நாங்கள் எதிர்க்க வில்லை. அதற்கு தேவையான நிலக்கரியை கொண்டுவர தரை, மற்றும் ரயில்வே மார்க்கம் இருக்கையில் கடல் வாழ் ஆதராத்தை அழித்து எங்களின் பிழைப்பையும் தகர்க்க வேண்டுமா என்பது தான் எங்களின் கருத்து. எதிர்ப்பு என ஒட்டு மொத்த மீனவர்களும் கல்லாமொழி பங்குத் தந்தையான ஜேம்ஸ பீட்டரும் சொல்கிறனர். இதன் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்கவும் செல்லவில்லை.

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது