Skip to main content

கடலில் பாலம் அமைக்க எதிர்ப்பு;நூற்றுக்கணக்கான படகில் மீனவர்கள் கடல் முற்றுகைப் போராட்டம்!!

Published on 18/09/2018 | Edited on 18/09/2018

 

 

800 மெகாவாட் கொண்ட 2 அலகுகளுடன் கூடிய உடன்குடி அனல் மின் நிலையம், தூத்துக்குடி மாவட்டமான உடன்குடியில் அமைய விருக்கிறது. 2009ல் மத்திய அரசின் அமைச்சர் ஜெயராம் ரமேஷால் அடிக்கல் நாட்டப்பட்டு பின் அத்திட்டம் கிடப்பில் வைக்கப்பட்ட நேரத்தில், அதனை தமிழக அரசே செயல்படுத்தும் என்று அறிவித்தவர் ஜெயலலிதா.

 

அதன் பின் டெண்டர் பணிகளால் தாமதமான, அத்திட்டம் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி 7259 கோடியில் அமைக்கப்படும் என அறிவித்து வீடியோ கான்ஃபரன்சிங்கு மூலம் அடிக்கல் நாட்டினர்.

 

உடன்குடியில் அமையவிருக்கும் அந்த அனல் மின் நிலையத்திற்குத் தேவையான மூலப்பொருள் நிலக்கரியை கடல் வழியாகக் கொண்டு வந்து குலசேகரப்பட்டணம் அருகில் உள்ள கல்லாமொழிக் கடற்கரையின் மூலம் இறக்குமதி செய்து அனல் மின் நிலையம் கொண்டு வருவதற்காக கல்லாமொழி கடலில் உள்ளே சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவு பாலம் அமைத்து கொண்டு வரப்படும் நிலக்கரியை கொண்டு செல்ல அங்கு நிலக்கரி இறங்கு தளம் அமைக்கப்படுகிறது. பின்பு நிலக்கரியை அங்கிருந்து அனல் மின் நிலையத்திற்கு கன்வேயர் பெல்ட் மூலம் கொண்டு செல்லப்படும்.

 

இந்தக் கடல் பாலம் அமைக்கப்படுவதால் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வது தடைபடும், மேலும் 9 கிலோ மீட்டர் தொலைவு பாலம் அமைப்பது கடல் வாழ் மீன் இனங்களை இடம் பெறச் செய்து விடும். கடலின் மாசு கெடுவதோடு ஆயிரக்கணக்கான சுற்றுப் பகுதி ஆலந்தலை அமலி நகர் மணப்பாடு குலசேகரன்பட்டினம், கல்லாமொழி உள்ளிட்ட மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்ப்டும் என மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

ஆனால் பணிகள் தீவிரமாக நடப்பதை அறிந்த சுற்று வட்டார 20 கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் கருப்புக் கொடி கட்டியவாறு கடல் வழியாக நிலக்கரி இறங்கு தளத்தை முற்றுகையிட்டனர். இதில் பெரியதாழை வரையிலான கடற்கரை மக்களின் படகுகளும் வரிசை கட்டியிருத்தன. அரசுக் கெதிரான கோஷங்களோடு மீனவர்களை வாழ விடு உள்ளிட்ட கோஷங்களையும் எழுப்பினர்.

 

மீனவ மக்களின் போராட்டம், காரணமாக நெல்லை சரக டி.ஐ.ஜி.கபில்குமார் சராட்கர் தலைமையில் தூத்துக்குடி எஸ்.பி.முரளிரம்பா கண்காணிப்பில் போலீசார் குவிக்கப்பட்டனர். சாலைகளில் செக் கோஸ்ட் அமைக்கப்பட்டு வாகனங்கள் தடுக்கப்பட்டன பத்திரிகையாளர்களைக் கூட உள்ளே அனுமதிக்காமல் தடையும் போடப்பட்டது.

 

அனல் மின் நிலையம் கூடாது என்று நாங்கள் எதிர்க்க வில்லை. அதற்கு தேவையான நிலக்கரியை கொண்டுவர தரை, மற்றும் ரயில்வே மார்க்கம் இருக்கையில் கடல் வாழ் ஆதராத்தை அழித்து எங்களின் பிழைப்பையும் தகர்க்க வேண்டுமா என்பது தான் எங்களின் கருத்து. எதிர்ப்பு என ஒட்டு மொத்த மீனவர்களும் கல்லாமொழி பங்குத் தந்தையான ஜேம்ஸ பீட்டரும் சொல்கிறனர். இதன் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்கவும் செல்லவில்லை.

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.