சென்னையில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் வசிக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை, அரசு நிலத்தில் குடியிருப்பதாகச் சொல்லி, வீடுகளைக் காலி செய்யவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி, வருவாய்த்துறை அதிகாரிகள் நெருக்கடி தர, ”காலாகாலமாக இங்கே வீடுகளைக் கட்டி வாழ்ந்துவரும் எங்களை, திடீரென்று வெளியேறச் சொன்னால், எங்கள் குழந்தை குட்டிகளை அழைத்துக்கொண்டு எங்கே போவோம்?” என்று அப்பகுதி மக்கல் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஆர்வம் காட்டாததால் இரவு பகலாக அவர்கள் அறவழிப் போராட்டத்தை நடத்திவருகிறார்கள்.