Skip to main content

உள்ளாட்சித் தேர்தல்களில் இடஒதுக்கீடு! நாடாளுமன்றத்தில் தி.மு.க வில்சன் வலியுறுத்தல்!  

Published on 29/03/2022 | Edited on 29/03/2022

           

 

Reservation in local elections! DMK Wilson insists in Parliament!

 

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று (29/03/2022) பேசிய தி.மு.க. எம்.பி.யும் வழக்கறிஞருமான வில்சன், உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக பல தகவல்களை பதிவு செய்தார். 

 

இட ஒதுக்கீடு குறித்து அவர் பேசும்போது, ’’உள்ளாட்சித் தேர்தல்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 1992- ல் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஆனால், 28 ஆண்டுகளாகியும் அந்த இடஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.  கடந்த 2011- ஆம் ஆண்டு 15- வது மக்களவையில் எஸ்.சி./ எஸ்.டி. வகுப்பினரைத் தவிர அனைத்து சாதிகளின் அடிப்படையில் சமூக, பொருளாதார சாதி வாரியான மக்கள் தொகை கணக்கு எடுப்பு நடத்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 4893.60 கோடி ரூபாயை ஒன்றிய அரசு செலவிட்டது. 

 

அதன்படி நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பின் தரவுகள் 2015-ல் ஒன்றிய அரசால் சேகரிக்கப்பட்டன. பிரதமர் தலைமையில் இயங்கும் அமைச்சரவை குழு மற்றும் நீதி ஆயோக்கின் கீழ் செயல்படும் நிபுணர் குழு ஆகியவற்றின் மூலமாக குறைகளை கண்டறிவதற்கு சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகளை வெளியிட முடிவு செய்தது. ஆனால் இன்று வரை அந்த குழுக்களை செயல்பட அனுமதிக்கவில்லை. 

 

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் கள தரவுகள் கிடைக்கும் போதும், அதற்கென அமைக்கப்படும் ஆணையத்தின் ஒப்புதல் கிடைக்கும் போதும்தான் உள்ளாட்சி தேர்தல்களில் இதர பிற்படுத்தப்பட்ட வருப்பினருக்கான இடஒதுக்கீட்டை வழங்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இத்தகைய சூழ்நிலை, அரசியலமைப்பில் ஒரு முட்டுக்கட்டையை ஏற்படுத்தி விட்டது. 

 

இதற்கிடையே, 20/12/2021 அன்று ஒன்றீய அரசு வெளியிட்ட ஒரு செய்தி குறிப்பில், இதரப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை அனுமதிப்பது குறித்து ஒரு சீராய்வு மனுவை தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்திருந்தும் இன்று வரை தாக்கல் செய்யவில்லை. 

 

ஒருபுறம், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசியலமைப்பு இட ஒதுக்கீட்டை வழங்குகிறது. ஆனால், மறு புறம் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளை வெளியிட ஒன்றிய அரசுக்கு விருப்பமில்லை. இதனால் கள தரவுகளை மாநிலங்களால் பெற முடியவில்லை. கள தரவுகள் இல்லாததால் மாநிலங்களின் இடஒதுக்கீட்டு கொள்கைகளை நீதிமன்றங்கள் புறந்தள்ளுகின்றன. இப்படி புறந்தள்ள வேண்டுமென்பதுதான் ஒன்றிய அரசின் குறிக்கோளா? 

 

அரசியலமைப்பு சட்டத்தின் அட்டவணை V11 -ன் படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒன்றிய அரசின் பட்டியலில் இருப்பதால் மாநில அரசுகளால் அதைச் செய்ய முடியாது. எனவே, பிரதமர் அவர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, சாதி வாரியாக 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகளை மாநிலங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் (அல்லது) அரசமைப்புச் சட்டம் 342 A (3) -ன் படி மாநில அரசுகள் சேகரிக்கும் கள தரவுகளின் அடிப்படையில் இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கிடும் வகையில் அரசமைப்புச் சட்டம் 243 (D) (6) மற்றும் 243 (T) (6) ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொண்டு உள்ளாட்சி அமைப்புகளில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் ‘’ என்று ஆவேசமாகப் பேசினார் வழக்கறிஞர் வில்சன்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.