தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக அரசு சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முன்பதிவு செயல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முன்பதிவு செயல் அறைகளை நாளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் நாளை காலை 11 மணி முதல் முன்பதிவு செயல் அறைகளில், பேருந்துகளில் செல்ல விரும்புகிறவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.