Skip to main content

ஆராய்ச்சி மாணவர் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம்!!!

Published on 09/11/2019 | Edited on 09/11/2019

காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்ததால் பெரும் பரபரப்பு. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் சேர்ந்த காளிமுத்து தனது மனைவி சந்திரவதனா மகன் சிவபிரசாத் ஆகியோருடன் காந்தி கிராம பல்கலைகழகத்திற்கு வந்த அவர் திடீரென நுழைவுவாயிலில் முன்பு தரையில் அமர்ந்து உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார்.
 

research student protest


இது குறித்து காளிமுத்து கூறுகையில் "நான் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப் பையும் இங்கிலாந்து நாட்டில் சர்ரே பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பை அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பயிற்சியும் பெற்று உள்ளேன். எனது சேவைக்காக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கிடைத்துள்ளது. நீர் மற்றும் கழிவுநீர் பிரிவில் உலக அளவில் தலைசிறந்த 50 நிபுணர்களில் ஒருவர் என்பதற்கான சர்வதேச விருது கிடைத்துள்ளது. 

நான் தேர்ந்தெடுத்த துறைகளில் பெற்ற அனுபவங்கள் அனைத்தும் பொது மக்களை சென்றடைய வேண்டும் என விரும்பினேன். கடந்த 2008 ஆம் ஆண்டு காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்து பல்கலைகழகம் நடத்திய அனைத்து ஆராய்ச்சித் தகுதி தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று அதற்கான சான்றிதழ்களை வைத்துள்ளேன். எனது ஆராய்ச்சி படிப்புக்கு தேவையான விவரங்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து திரட்டினேன். 

'வேளாண்மை துறையில் பருவநிலை மாறுபாடு' என்ற எனது ஆராய்ச்சியின் ஒரு பகுதியை காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் 2012ஆம் ஆண்டு நடந்த பன்னாட்டு கருத்தரங்கில் நிபுணர்கள் முன்னிலையில் விளக்கினேன். தற்போது எனக்கு பிஎச்டி படித்ததற்கான டாக்டர் பட்டம் வழங்காமல் பல்கலைக்கழகம் தாமதித்து வருகிறது. 

இது குறித்து பலமுறை கேட்டும் உரிய பதில் அளிக்கவில்லை. தற்போது நான் டெல்லியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுப்பதால் தான் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்கிறேன்" என்று கூறினார்.

இப்படி காந்திகிராம பல்கலைக்கழகம் முன் காளிமுத்து குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படவே, அம்பாத்துரை போலீசார் உடனே ஸ்பாட்டுக்கு வந்து காளிமுத்துவிடமும் அவர் குடும்பத்தாரிடம் பேசி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
 

research student protest


இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர் அவர்களிடம் கேட்டபோது, "காளிமுத்து அமெரிக்காவில் முதுகலை பட்டம் படித்து உள்ளார். அமெரிக்காவில் முதுகலைப் படிப்புக்கு ஓராண்டில் 2 செமஸ்டர் தேர்வு எழுத வேண்டும், ஆனால் இந்தியாவில் முதுகலைப் படிப்புக்கு இரண்டு ஆண்டுகள் படித்து நான்கு செமஸ்டர் தேர்வுகள் எழுத வேண்டும்.

இதன் காரணமாகவே அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கவில்லை. இந்தியாவில் வேறு ஏதேனும் பல்கலைக்கழகத்தில் இதே போல் வெளிநாட்டில் ஓர் ஆண்டில் முதுகலை பட்டப்படிப்பு முடித்து அதன் பிறகு ஆராய்ச்சி மேற்கொண்ட மாணவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி இருப்பதற்கான சான்று இருந்தால் நாங்களும் வழங்க தயார். இதன் காரணமாகவே அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் இவர் சேர்ந்த போது நிர்வாகக்குழு முறையாக ஆய்வு செய்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்" என்று கூறினார். இச்சம்பவம் காந்தி கிராம பல்கலை கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது