Advertisment

திருநாவலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழா 

Republic Day held at Thirunavur Government High School

கள்ளக்குறிச்சி மாவட்டம்- திருநாவலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியை கே.இளங்கோதை தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பத்மநாபன் முன்னிலையில், சிறப்பு விருந்தினர் திருநாவலூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் சாந்தி இளங்கோவன் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

Advertisment

இவ்விழாவில் ஒன்றிய கவுன்சிலர் காமராஜ், சேந்தமங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் உமா சந்திரசேகர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளியின் உதவித்தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜசேகரன், மகேஸ்வரி, பாலகுரு, வாசுதேவன், ராஜகுரு, உடற்கல்வி ஆசிரியர் அன்பு சோழன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe